செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் செயல்படும் எஸ்.ஆர்.எம். பொதுப் பள்ளியில் அனிமல் கிங்டம் என்ற தலைப்பில் மழலையர்களுக்கான விளையாட்டு விழா நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இந்திய அணியின் வாலிபால் வீராங்கனை செல்வி.டி.பி.எழில்மதி பதக்கங்கள் வழங்கினார். பள்ளியின் தாளாளர் எம்.சுப்பிரமணியன், பள்ளியின் இயக்குனர் மணிமங்கை சத்யநாராயணன் பள்ளியின் கல்வி ஆலோசகர் டாக்டர்.கே.ஆர்.மாலதி, பள்ளியின் முதல்வர் எஸ்.புவனேஸ்வரி மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.