செங்கல்பட்டு, ஜன. 7- செங்கல்பட்டு, சின்ன நத்தம், கே.கே. நகர் பகுதி யைச் சேர்ந்தவர் அப்பு கார்த்தி(31), இவர் கடந்த 2018 வழக்கு சம்பந்தமாக வியாழனன்று (ஜன 6) மாலை செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு வந்தார். காவல் நிலையம் எதிரில் உள்ள தேநீர் கடை ஒன்றில் தேநீர் அருந்தச் சென்ற போது இருசக்கர வாக னத்தில் வந்த மூன்று பேர் காத்திக் மீது 2 நாட்டு வெடி குண்டுகளை வீசி கத்தியால் சரமாரியாக வெட்டி சாய்த்த னர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பிச் சென்று செங்கல்பட்டு, ரேடியோ நகர் மேட்டுத் தெரு பகுதிக்குச் சென்றனர். அங்கு மகேஷ் என்பவர் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த போது அவரையும் கத்தி யால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு மூன்று பேரும் தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாக செங்கல்பட்டு நகர காவலர் கள் வழக்குப் பதிவு செய்த னர். இந்த வழக்கு தொடர் பாக 5 தனிப்படை அமைக் கப்பட்டு காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்த கொலையில் திருப்புலிவனம் பகுதியைச் சேர்ந்த மாதவன்(27), செங்கல்பட்டு தினேஷ்(22), பி.வி.கொளத்தூர் பிஸ்கெட் என்கிற முகமது மொய்தீன் (27) ஆகிய 3 பேருக்கு தொடர்பு இருப்பது காவல் துறையினருக்கு தெரிய வந்தது. செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் முக்கிய குற்ற வாளியான மதன் என்கிற மாத வன் உத்திரமேரூர் அருகே திருப்புலியூர் என்ற கிராமத் தில் உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் மதனை கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மொய்தீன் மற்றும் தினேஷ் ஆகிய இரண்டு பேரை செங்கல்பட்டு அருகே மாமண்டூர், இருகுன்றப் பள்ளி என்ற இடத்தில் மலை பகுதியில் ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் 8 பேர் கொண்ட குழுவினர் கைது செய்ய முயன்றபோது போலீசார் மீது 2 நாட்டு வெடிகுண்டுகளை இவர்கள் வீசியதாகவும் கத்தியாலும் தாக்கியதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ள னர்.
அதில் ஒரு நாட்டு வெடி குண்டு வெடிக்காத நிலை யில் மற்றொரு நாட்டு வெடி குண்டு வெடித்து சிதறியது இதில் போலீசார் 2 பேருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப் படுகிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தற்காப்பு க்காக நடத்திய என்கவுன்ட்ட ரில் தினேஷ், மொய்தீன் இரு வரும் சுட்டுக் கொல்லப்பட்ட னர். மாதவன் கைது செய்ய ப்பட்டுள்ளார். இந்தச் சம்ப வத்தை தொடர்ந்து இவர்க ளது சடலம் உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. ரவுடி கள் நடத்திய தாக்குதலில் சுரேஷ்குமார், பரத்குமார் என்ற இரு காவலர்கள் காய மடைந்தனர். காயமடைந்தவர்களை ஐ.ஜி. சந்தோஷ்குமார் சந்தித்து ஆறுதல் கூறினார். காஞ்சிபுரம் சரக காவல் துணை தலைவர் சத்திய பிரியா, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப் பாளர்.
அரவிந்தன் உள்ளிட் டோர் சுட்டுக் கொல்லப் பட்ட ரவுடிகளின் உடற்கூறு ஆய்வையும் பார்வை யிட்டார். இதனைத் தொடர்ந்து ஐ.ஜி, டி.ஐ.ஜி, மற்றும் காவல்துறை கண்காணிப் பாளர் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் மேற்கண்ட தகவல்களை தெரிவித்தனர். மாதவனிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம் . இந்தக் கொலைக்கான பின்னணி குறித்து காஞ்சிபுரம் டிஐஜி சத்யபிரியா கூறுகையில், அப்புகார்திக்கின் நண்பர் ஹரிகிருஷ்ணன் என்பவருக் கும், தினேஷின் தங்கை பவித்ராவுக்கும் காதல் இருந்துள்ளது. இதனை தினேஷ் எதிர்த்துள்ளார். அப்புகார்த்திக், மகேஷ் இருவரும் ஹரிகிருஷ்ண னுக்கு ஆதரவாக இருந்துள் ளனர். இந்த முன்விரோதத் தால் இரட்டை படுகொலை நடந்துள்ளது என்றார்.