செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் படாளம் ஊராட்சியில் உள்ள மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2022-23 ஆண்டிற்கான கரும்பு அரவையை மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் வெள்ளியன்று (டிச. 9) தொடங்கி வைத்தார். இதில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், ஆலை மேலாண்மை இயக்குநர் தே.ஜவகர் பிரசாத் ராஜ், தலைமை சக்கரை பொறியாளர் என்.பிரபாகரன், நிர்வாக குழுத் தலைவர் கோ.அப்பாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.