வேலூர், டிச. 5- 7 குடும்பத்தினரை ஊரைவி ட்டு ஒதுக்கி வைத்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். மக்கள் குறைதீர்வு கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமார வேல் பாண்டியன் தலைமையில் திங்களன்று (டிச. 5) நடை பெற்றது. காட்பாடி அருகே உள்ள தேன்பள்ளி அருந்ததியர் காலனியைச் சேர்ந்த பொது மக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில், தேன் பள்ளி அருந்ததியர் காலனியில் வீடு கட்டியது சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டது. இதில் எங்கள் 7 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக நாட்டாண்மை அறிவித்தார். நாங்கள் ஊரில் தண்ணீர் எடுக்கக்கூடாது. தெரு வில் நடக்கக் கூடாது. யாரிடம் பேசினாலும் அபராதம் விதிக்கப்படும். திருவிழாக்களில் அனுமதி இல்லை. எங்கள் பிள்ளைகள் பள்ளிக் கூடங்க ளுக்கு போனால் கேவலமாக பேசுகிறார்கள். இதுகுறித்து மேல்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் கண்டு கொள்ள வில்லை. இது பற்றி தக்க நடவடிக்கை எடுத்து எங்கள் வாழ்வாதாரத்திற்கு வழிகாட்ட வேண்டும். கொலை மிரட்டலில் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதில் கூறியுள்ளனர். அதேபோல் குடியாத்தத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தனது மனைவி ரேவதியுடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் யானைக்கால் நோய் பாதிப்பு ஏற்பட்டதால் வேலைக்கு செல்ல முடிய வில்லை. குடும்பம் நடத்த வழி இல்லை. என் மனைவிக்கு ஏதா வது வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து ஆட்சியர் நோயால் பாதிக்கப்பட்ட ராஜ சேகருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மேலும் அவரது மனைவி ரேவதிக்கு குடி யாத்தம் நகராட்சியில் துப்புரவு பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.