வேலூர், ஏப்.9- வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலி கான் பேட்டி அளித்துள்ளார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்வி களுக்கு தனக்கே உரிய பாணி யில் அவர் பதிலளித்துள்ளார். அது வருமாறு: “’காங்கிரஸ் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்கவில்லை என்றால் ராகுல் ஒதுங்கி வழி விட வேண்டும்’ என பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறாரே” என்ற கேள்விக்கு, “பிரசாந்த் கிஷோர் யார், அவர் ஒரு தர கர். 600 கோடி.. 6000 கோடி.. பணத்தைப் பெற்றுக் கொண்டு குள்ளநரித்தனம் செய்து எப்படி ஜெயிப்பது என ஆலோசனை கூறுபவர்.
ராகுல் காந்திக்கு தகுதி இல்லை என்றால் மோடி தான் வர வேண்டுமா? ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பிறகு 34 வருடங்கள் எந்த அரசுப் பதவி யிலும், அதிகாரத்திலும் அந்தக் குடும்பம் இல்லை. மிகப்பெரிய நடைபயணத்தை ராகுல் காந்தி போல் யாரும் செய்யவில்லை.
ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி தான் பிரதமராக வர வேண்டும் என்பது எல்லோரு டைய விருப்பம். ஏன் எனது விருப்பமும் கூட. 38 இடங்களில் இந்தியா கூட்டணியை ஆத ரிக்கிறேன். பிரசாந்த் கிஷோர் ஏதோ வன்மத்தில் பேசுகிறார். அது தெளிவாகத் தெரிகிறது” என்று மன்சூர் அலிகான் பதி லளித்தார். பாஜக வேட்பாளர் நயி னார் நாகேந்திரனிடம் இருந்து 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்தி ருப்பது பற்றிய கேள்விக்கு, “பறிமுதல் செய்யப்பட்ட பணத் திற்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என அவர் (நயினார்) கூறுகிறார்.
ஆம் அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அது என் னுடைய பணம். எனக்குப் பல தயாரிப்பாளர்கள் பணம் தர வேண்டும். அந்த பணத்தை எல் லாம் அங்கு தான் கொடுத்து வைத்துள்ளதாகக் கூறுகின்றார் கள். அதை எனக்கு அனுப்பி வைக்கச் சொல்லுங்கள்” என நக் கலாகப் பதில் அளித்தார். அதே போல் “பாஜக ஓட்டுக் குப் பணம் கொடுப்பதில்லை என கூறுகின்றனரே..” என்ற கேள்விக்கு, “அது தான் செய்தி களில் வந்து விட்டதே. அங்கு கொடுக்க வைத்து, இங்கு போன் போட்டு பிடிக்க வைக்கி றார் அண்ணாமலை. அவருக் குக் காட்டிக் கொடுப்பது தான் வேலை” என்று விளாசினார்.