வேலூர் மார்ச் 19 - காட்பாடி தாராபடவேடு பாலாஜி நகர் பகுதியில் கடந்த ஆட்சியில் பல்வேறு வசதிகளுடன் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இங்கு தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவமனையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த னர். மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும் மைய மும் உள்ளது.நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த தொடர் மழையால் மருத்துவமனை சுற்றிலும் மழைநீர் தேங்கியது. இத னால் நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற முடியாததால் அருகில் உள்ள கழிஞ்சூர் மந்தைவெளி பகுதிக்கு தற்காலிகமாக இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மாற்றப்பட்டது. நான்கு மாதங்களுக்கு மேலாகியும் தாராபடவேடு ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படாததால் அப்பகுதி மக்கள் காய்ச்சல் உட்பட பல்வேறு மருத்துவ சிகிச்சை களுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பீரோ, மருத்துவ உபகரணங்கள் போன்ற பல்வேறு பொருட்கள் பாழடைந்து வரு கின்றது. இது மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் வரு வதால் மாநகராட்சி மேயரும் துணை மேயரும் உடனடியாக தலையிட்டு சுகாதார நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். - நநி