districts

img

குடியாத்தம் எர்த்தாங்கலில் மாடு விடும் விழா

குடியாத்தம், பிப். 27- குடியாத்தம் எர்த்தாங்க லில் மாடு விடும் விழாவில் காளைகள் முட்டியதில் 12 பேர் காயம் அடைந்தனர். வேலூர் மாவட்டம் குடி யாத்தம் அருகே எர்த்தாங்கல் கிராமத்தில் 48ஆம் ஆண்டு காளை விடும் திருவிழா நடைபெற்றது. இதில் குடியாத்தம், கே வி குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் சித்தூர், பங்காரு பாளையம் உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. காளை ஓடும் வீதிகளின் இரு பகுதியிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப் பட்டிருந்தன, விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்தனர். பின்னர் குடியாத்தம் எம்.எல்.ஏ அமலுவிஜயன் போட்டி களை தொடங்கி வைத்தார். காளை விடும் விழாவை காண குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து காளைகள் ஓடுவதைப் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். காளை விடும் விழாவில் காளைகள் முட்டியதில் 12 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முத லுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த ஒருவர் குடி யாத்தம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காளை விடும் விழாவில் வெற்றி பெற்ற 59 காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.