வேலூர் டிச 9 - வேலூர் மாநகராட்சி 3ஆவது மண்டலத்திற்குட்பட்ட பலவன்சாத்து பகுதியில் 250க்கும் மேற்பட்டோர் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்நிலை யில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்த லின் பேரில் மாநகராட்சி மற்றும் வரு வாய் துறையினர் அப்பகுதிக்கு சென்று அனைவருக்கும் நோட்டீஸ் வழங்கி யுள்ளனர். இந்நிலையில் அந்த பகுதியை ஆய்வு செய்து நீர் பிடிப்பு பகுதி இல்லை யென்றால் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், இல்லையென்றால் வீடுகளை இடிப்பதற்கு முன்பு மாற்று இடம் வழங்க வேண்டும் என வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளியன்று (டிச. 9) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிறகு, மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனுவும் கொடுத்தனர். அப்போது, அந்த இடத்திற்கான அனைத்து ஆவணங்களையும் வழங்கியதுடன், ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை கைவிட்டு அதே இடத்தில் தொடர்ந்து வசிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆணை யர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரி வித்தார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் எஸ்.செல்வி தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பி னர் எஸ்.டி.சங்கரி, மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.பி.ராமச்சந்திரன், செ.ஏகலைவன், மாவட்டக்குழு உறுப்பினர் டி.முரளி, சி.எஸ்.மகா லிங்கம், தாலுகா குழு உறுப்பினர் ஜி.நரசிம்மன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர்.