districts

img

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் கூடுதலாக 36 கேமராக்கள்

வேலூர், செப். 6- வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் கூடுதலாக 36 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என மாநக ராட்சி ஆணையர் அசோக் குமார் தெரிவித்தார்.  வேலூர் புதிய பேருந்து நிலையம் சுமார் ரூ.52 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இங்கு தற்போது சென்னை, அரக்கோணம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையம் சுத்தம் இல்லாமல் இருப்பதாக வும், இரவு நேரத்தில் மர்ம நபர்கள் மது அருந்துவதாக வும் புகார்கள் எழுந்தது.  இது தொடர்பாக வேலூர் மாநகராட்சி ஆணையனர் அசோக்குமார் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பேருந்து நிலையத்தின் உள்ள கழிவறையில் கண்ணாடி உடைந்திருந்தது தெரியவந்தது. அதை மாற்றவும், கட்டிடத்தில் உள்ள கழிவறைகளை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வில் கழிவறை கள் சுத்தமாக வைக்கவும், இதுவரை பயன்படுத்தாமல் இருந்த கழிவறையை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தூய்மைப் பணி மேற்கொள்வதற்காக கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.  தற்போது காலை, மாலை, இரவு வேலைக ளில் முறையே 3 காவலர்கள் பணியாற்றி வரு கின்றனர். மேலும் கூடுத லாக 3 காவலர்கள் நிய மிக்கப்படுவார்கள் என்றும் பேருந்து நிலையப் பகுதி யில் சிறுநீர் கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையர் எச்சரிக்கை செய்தார். தற்போது பேருந்து  நிலைய வளாகப் பகுதி யில் 16 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது. கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் கூடுதலாக 36 கண்காணிப்பு கேமராக்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்டு  பேருந்து நிலையம் இந்த வார இறுதிக்குள் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்தார்.

;