districts

இழப்பீடு கேட்டு தொடரும் விவசாயிகள் போராட்டம்

ராணிப்பேட்டை, அக். 14- மின்கோபுரங்களால் பாதிக்கப்படும் விவ சாயிகள் இழப்பீடு கோரி 2ஆவது நாளாக காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். தமிழ்நாடு மின் தொடர மைப்பு கழகம் மற்றும் பவர்கிரிட் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட உயர்மின் கோபுரங்களால் ராணிப்பேட்டை மாவட் டத்தில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உயர்ந்தபட்ச இழப்பீடு வழங்கக்கோரி 2ஆவது நாளாக விவசாயிகள் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனையடுத்து, ஆற்காடு வட்டாட்சியர் எம்.கோ பாலகிருஷ்ணன், மண்டல துணை வட்டாட்சியர் பாலாஜி, திமிரி வருவாய் ஆய்வாளர் மு.ராஜலக்ஷ்மி, பரதராமி கிராம நிர்வாக அலுவலர் சரவணன் ஆகி யோர் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி, மாவட்டத் தலைவர் எஸ்.கிட்டு, பொருளாளர் சி.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.   அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் வழங்கியது போன்று இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், உடன்பாடு எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக  நடந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திரு வண்ணாமலை மாவட்டச் செயலாளர் எம்.சிவகுமார், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பலராமன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.