மயிலாடுதுறை, ஜூன் 21- கள்ளக்குறிச்சி விஷச்சாராய சாவு களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வெள்ளியன்று மாநிலம் முழு வதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக மயிலாடு துறை கிட்டப்பா அங்காடி அருகில் மாவட்டத் தலைவர் எம்.ஐயப்பன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்கார வேலன் கண்டன உரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் அறிவழகன், சங்க நிர்வாகிகள், புளியந்துறை ஊராட்சி மன்றத் தலைவர் நேதாஜி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்கார வேலன் பேசுகையில், “கடந்த 2 ஆண்டு களில் கள்ளச் சாராயத்தினை அருந்தி 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள் ளனர். தமிழ்நாட்டில் கள்ளச் சாராய உயிரிழப்புகளை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். 1999 இல் கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக போராடிய வாலி பர் சங்க தோழர்கள் குமார், ஆனந்தன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட தற்கு பிறகு தமிழக அரசு கள்ளச் சாராய விற்பனைக்கு எதிரான நடவடிக் கைகளை கடுமையாக எடுத்தது. ஆனால் காலப்போக்கில் நட வடிக்கை எடுக்காததால், கள்ளச் சாராயம் மட்டுமல்லாமல் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பரவ லாக விற்கப்படுகிறது.
கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும். சாராய விற்பனைக்கு எதிராக போரா டுபவர்களை காவல்துறை பல இடங் களில் காட்டிக் கொடுக்கும் வேலையும் நடந்து வருகிறது. போதைப் பழக்கத்திற்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை மாநிலம் முழுவதும் நடத்தி அதை மாநில அரசிடம் ஒப்படைத்தவுடன், போதைப் பொருள் விற்பனைக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதமாக எடுத்தனர்.
ஆனால் தொடந்து நட வடிக்கைகள் இல்லாததால் இன்று மாநி லத்தின் எல்லா பகுதிகளிலும் கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. இந்தியா முழுவதும் 2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வின்படி, போதை மாத்திரை உட்கொள்பவர் களில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 40 லட்சம் பேரும், 17 வயதிலிருந்து 77 வயதுக்குட்பட்டவர்கள் 2 கோடி பேரும் போதைக்கு அடிமையாகியுள்ளனர்.
போதை ஊசி பயன்படுத்தி அடிமை யானவர்கள் 10 வயதிலிருந்து 17 வயது வரை 10 லட்சம் பேரும், 18 வயதி லிருந்து 77 வயது வரை 1.10 கோடி பேரும் அடிமையாக உள்ளனர். மது பானம் உட்கொள்பவர்கள் 10 வயதி லிருந்து 17 வயது வரை 30 லட்சம் பேரும், 18 வயதிலிருந்து 77 வரை 15 கோடி பேரும் போதைக்கு அடிமை யாக உள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. தமிழ்நாடும் இதில் விதிவிலக்கல்ல. கள்ளக்குறிச்சியில் தற்போது நடந்துள்ள கள்ளச்சாராய உயிரிழப்பு களுக்கு உரிய நடவடிக்கைகளை அரசு எடுப்பதோடு, நிவாரணங்களை மட்டும் வழங்காமல் இனிவரும் காலங்களில் இதுபோன்ற உயிரிழப்பு கள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு ஆய்வு குழுவை அமைத்து கள்ளச் சாராய விற்பனைக்கு எதிரான நட வடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்” என்றார்.