districts

img

இழப்பீடு தராமல் 4 வழிச்சாலை பணி செய்வதா?

மயிலாடுதுறை, ஆக.25 - நான்கு வழிச்சாலை பணிக்காக கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காமல் அப்பாவி ஏழை மக்களை காவல்துறையை கொண்டு விரட்டியடித்து, அராஜகமான முறை யில் குடிசைகளை அகற்றிவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்  சாட்டியுள்ளது.     

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம் பாடி வட்டம், தலைச்சங்காடு அருகே யுள்ள தலையுடையவர் கோவில்பத்து, கண்டியன் திடல் பகுதியில், விழுப்புரம்  முதல் நாகை வரை நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி கடந்த சில வருடங்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினரின் துணையோடு விவசாயி களை ஏமாற்றி, சொற்ப விலைக்கு அவர்களிடமிருந்து விளைநிலங்களை வாங்கி, மிகத் தீவிரமாக சாலை அமைக் கும் பணி நடக்கிறது. நகாய் அதிகாரி களும், சாலைப் பணியை செய்து வரு கிற தனியார் ஒப்பந்த நிறுவனமும்  ஆரம்பம் முதலே விவசாயிகளிடமும், குடியிருப்புகளை இழந்த ஏழைகளிட மும் அராஜகப் போக்குடன் நடக் கின்றன. இதைக் கண்டித்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், நீதிமன்ற வழிகாட்டுதலை மதிக்காமல் சட்டவிரோதமாக பணிகள்  நடந்து வருகின்றன. 

இந்நிலையில் தலையுடையவர் கோவில்பத்து, கண்டியன் திடலில் வசித்த 9 குடியிருப்புகளுக்கு உரிய  இழப்பீடும், மாற்று இடமும் வழங்காமல்  நகாய் அதிகாரிகள் காவல்துறை துணையுடன் வெள்ளிக்கிழமை வலுக் கட்டாயமாக அராஜகமான முறையில் வீடுகளை இடித்தனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செம்பனார்கோவில் ஒன்றியச் செயலா ளர் கே.பி.மார்க்ஸ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்து றையினர் போராடியவர்களை தாக்கி  கைது செய்தனர். தொடர்ந்து சனிக் கிழமை காலை காவல்துறையினர் துணையோடு ஒட்டுமொத்த வீடுகளை யும் இடித்து தரைமட்டமாக்கினர்.

குறிப்பாக தலையுடையவர் கோவில் பத்து, கண்டியன் திடல் முனியாண்டி மற்றும் அவரது மகன் குருமூர்த்தி குடும்பத்தினர் வீட்டை இழந்து, வாழ வழியின்றி கைக்குழந்தைகளோடு சாலையில் வசிக்கின்றனர். இரவு நேரத்தில் உறங்க இடமின்றி, உண வின்றி தவித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய இழப்பீடும், மாற்று இடமும் வழங்க வேண்டுமென வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரை சந்தித்து மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை  மனு அளித்துள்ளனர். இரண்டு நாட் களாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தவிக்கும் ஏழை குடும் பத்தை மாவட்ட ஆட்சியர் பாது காப்பாரா?