திண்டுக்கல், மார்ச் 10- திண்டுக்கல்லில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டக் குழு அலுவலகத்தில் செவ்வா யன்று நடைபெற்ற கருத்தரங்கிற்கு கட்சியின் ஒன்றி யக் கவுன்சிலர் ஜீவாநந்தினி தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.வசந்தாமணி, ஜி. ராணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.வனஜா, எம்.ஜானகி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர். ஸ்ரீராமபுரம் பேரூராட்சி கவுன்சிலர் மாலதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்டக் குழு உறுப்பி னர் சூசைமேரி நன்றி கூறினார்.