விருதுநகர், பிப்.5- விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்த ஜெ.மேகநாதரெட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு பணிமாறு தலாகி சென்னைக்கு சென்றுள் ளார். இந்நிலையில் தற்போது இம் மாவட்டத்தில் புதியதாக பொறுப்பு ஏற்க வருகை தரும் மாவட்ட ஆட்சி யர் ஜெயசீலன், இம்மாவட்டத்தில் முக்கியமாக உள்ள அடிப்படை கோரிக்கைகள் மீது உரிய நட வடிக்கை எடுத்து அதை சரி செய்திட வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மாவட்டத் தலைநகராக உள்ள விருதுநகரில் அடிப்படை பிரச்ச னைகள் ஏராளமாக உள்ளன. குறிப் பாக நகரின் முக்கிய குடிநீர் ஆதா ரமாக இருந்து வந்த ஆணைக்குட் டம் அணையில் தேங்கியுள்ள மழை நீர் முழுவதும் உப்பு சுவையுள்ள தாக மாறி விட்டது. இதன் காரண மாக விருதுநகரில் 80 சதவீத குடி யிருப்புகளுக்கு அதிக உப்பு சுவை யுள்ள குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை தொண்டை வலி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்களினால் அவதிப்பட்டு வரு கின்றனர். எனவே, குடிநீர் உப்பு நீராக மாறியதற்கான காரணத்தை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆணைக்குட்டம் அணையின் கதவணை பழுதாகி விடுகிறது. இதனால், மழைக் காலங்களில் தண்ணீர் வீணாக வெளியேறி விடும் நிலை நீண்ட காலமாக தொடர்கிறது, எனவே. புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கதவணைகளை மாற்றி அணை யில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு தண்ணீரைத் தேக்கிட வேண்டும். அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர் ஆகிய 3 நகராட்சிகளில் வசிக்கும் பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் வகை யில் நடைபெற்று வரும் இரண்டா வது தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்க வேண்டும்.
புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத்துக!
விருதுநகரில் கட்டி முடிக்கப் பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டு நிர்வாக காரணங்களால் 30 ஆண்டு களாக செயல்படாமல் காட்சிப் பொருளாக திகழ்ந்து வரும் புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத் திட வேண்டும். விருதுநகரில் உள்ள மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரு கிறது. இதனால், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் நாள்தோறும் பெரும் அவதிப் பட்டு வருகின்றனர். எனவே, மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு தினசரி 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகர் நகராட்சியில் 2007 ல் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தற்போது வரை நிறைவு பெறாமல் இருப்பதை சரி செய்ய வேண்டும்.
சிவகாசியில் அடிப்படை வசதிகளை விரைந்து செய்க!
புதிய மாநகராட்சியாக அறி விக்கப்பட்ட சிவகாசியில் குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் விரைவாக செய்து தர வேண்டும். திருத்தங்கல் பகுதி யில் குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வச திகளை செய்து தர வேண்டும். சிவகாசியில் சுற்றுச் சாலை அமைக் கும் பணிகளை விரைவில் துவங்கி மாநகரின் போக்குவரத்து நெரி சலை குறைத்திட வேண்டும். சிறு வர்களுக்கான பூங்கா அமைத்தல். திருத்தங்கல். சாட்சியாபுரம் பகுதி யில் இரயில்வே மேம்பாலம் ஆகிய பணிகள் அறிவிக்கப்பட்ட நிலை யில் உள்ளது. அருப்புக்கோட்டையில் ஆக்கி ரமிப்புகளை அகற்றி போக்கு வரத்து நெருக்கடியை சரி செய்ய வேண்டும். நீர் நிலைகளில் கழிவு நீர் தேங்குவதைத் தடுக்க வேண் டும். கழிவு நீர் வாறுகால்களை தூர்வாரி சுகாதார சீர்கேடுகளை களைந்திட கூடுதலான துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும். இராஜபாளையத்தில் கடந்த 2018இல் ஒரே நேரத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணி, புதிய இரயில்வே மேம்பாலம் அமைத் தல் மற்றும் தாமிரபரணி குடிநீர்த் திட்டப் பணி ஆகியவை தொடங் கப்பட்டன.
ஆனால். அப்பணிகள் தற்போது வரை நிறைவடைய வில்லை. இதன் காரணமாக. தோண்டப்பட்ட சாலைகள் பெரும் பாலான இடங்களில் சீர் செய்யப் படாத நிலை உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் நாள்தோறும் பெரும் துயரத்தை சந்தித்து வரு கின்றனர். இப்பணிகளை வேகப் படுத்தி நிறைவு செய்திட நட வடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் நகராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்கு வழங்கப் படாத தாமிபரணி குடிநீருக்கு மாதம் 150ரூபாய் கட்டணம் வசூலிக்கும் நிலை உள்ளது. இதேபோல். புதி தாக கட்டி முடிக்கப்பட்ட வீடு களுக்கு சொத்து வரியானது சென்னை மாநகராட்சியை விட மிகவும் அதி கமாக உள்ளது. அதை குறைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவில்லிபுத்தூரை வாக னங்கள் எளிதில் கடந்து செல்லும் வகையில் புறவழிச்சாலை அமைக்கும் பணியை துரிதப் படுத்த வேண்டும். குடிநீர். கழிவு நீர் வாறுகால் சுத்தப்படுத்துதல், குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
வைப்பாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்திடுக!
சாத்தூர் பகுதியில் நடை பெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை வேகமாகவும் தரமாக வும் செய்திட வேண்டும்.பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் சரிவர செல் லாத நிலையை போக்கிட நட வடிக்கை வேண்டும். வைப்பாற் றில் கழிவு நீர் கலந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் பெரும் சுகாதார சீர் கேடு ஏற்பட்டு வருவ தோடு, நிலத்தடி நீரும் மாசடை கிறது. எனவே, வைப்பாற்றில் கழிவு நீர் கலப்பதை உடனடியாக தடுக்க வேண்டும். இதுபோன்ற முக்கியப் பிரச்ச னைகளை விருதுநகர் மாவட்டத் தில் பொறுப்பேற்க உள்ள மாவட்ட ஆட்சியர் கவனம் செலுத்தி நிறை வேற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் எதிர் பார்க்கின்றனர்.