தென்காசி, ஜூன் 20 கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்ததை ஒட்டி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி களில் திங்கட்கிழமை அன்று பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து திங்கட்கிழமை மதியம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் செவ்வாயன்று அதிகாலை நீர்வரத்து குறைந்ததை ஒட்டி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றா லம், புலி அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் நீர் வரத்து இருப்பதால் சுற்றுலா பயணிகள் அனைத்து அருவிகளிலும் உற்சா கமாக நீராடினர்.