districts

மதுரை முக்கிய செய்திகள்

பூக்கள் விலை உயர்வு

மதுரை, ஜன.12- மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பொங்கல்  பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரித்துள் ளன. மல்லிகை பூ ஒரு கிலோ ரூ. 2500, முல்லை ரூ. 1300,   பிச்சி ரூ. 1200, சம்பங்கி ரூ. 150, செவ்வந்தி ரூ. 250,  பட்டன் ரோஸ் ரூ. 250, அரளி ரூ, 300 . மற்ற பூக்கள் விலை யும் சற்று உயர்ந்துள்ளது மார்கழி கடைசி வெள்ளி,  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலை உயர்ந்துள் ளது. தொடர்ந்து வரும் இரண்டு நாட்களுக்கு பூக்களின்  விலை சற்று உயரக்கூடும் என்று மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை  வியாபாரிகள் கூறுகிறார்கள்.

பொங்கல் பண்டிகை தென் மாவட்டங்களுக்கு கூடுதல்  சிறப்பு ரயில்கள்

சென்னை,ஜன.12- சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரு கூடுதல் பொங்கல் சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.  அதன்படி தாம்பரம் - திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் (06049) ஜனவரி 14 அன்று தாம்பரத்திலிருந்து இரவு 10.20  மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9  மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - தாம்பரம் அதி விரைவு சிறப்பு ரயில்  (06050) திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 18 அன்று  மாலை 05.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில்கள்  செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி  பெட்டிகள், 13 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி கள், 6 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு வெள்ளிக்கிழமை (ஜனவரி 13) காலை 8 மணிக்கு துவங்குகிறது என்று தென்னக ரயில்வே மதுரை  கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

சாலையோரம் இறந்து கிடந்த சிறுத்தை பூனை

தேனி, ஜன.12- தேனி மாவட்டம், கம்பம்மெட்டு அருகே உள்ள கேரளப்  பகுதியான மூணாறு-தேக்கடி மாநில நெடுஞ்சாலையில் உள்ள புளியன் மலை அருகே சாலையோரம் லெப்பேட்  கேட் எனப்படும் சிறுத்தை பூனை ஒன்று இறந்து கிடந்தது.  சிறுத்தைப்பூனை சடலத்தைக்கண்ட அப்பகுதி மக்கள்  இறந்தது சிறுத்தை என வனத்துறையினருக்கு தன வல்கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், இறந்த சிறுத்தைப்பூனை உடலை மீட்டு தேக்கடி வனவிலங்கு ஆராய்ச்சிநிலைய மருத்துவமனைக்கு உடற்கூறு சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இறந்தது மூன்று வயது மதிக்கத்தக்க சிறுத்தை பூனை  என்றும், அது வாகனம் மோதியோ அல்லது வேறு கார ணங்களாலோ இறந்திருக்கக்கூடும், பிரேத பரிசோத னைக்கு பின் சிறுத்தைப்பூனை உடல் வனப்பகுதியில் புதைக்கப்படும் என்றனர்.

தொழிலாளி கொலை வழக்கில்  முதியவருக்கு ஆயுள் தண்டனை

தேனி, ஜன.12- தேவாரம் அருகே நிகழ்ந்த  தொழிலாளி கொலை வழக்  கில் முதியவருக்கு தேனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள டி.மீனாட்சி புரத்தைச் சேர்ந்தவர்கள் சக்திவேல்(27), செல்லத்துரை (64), கிருஷ்ணன்(35). இவர்கள் மூவரும் 2017 அக்டோபர் 14 ஆம் தேதி அங்குள்ள தோட்டத்தில் மது அருந்தினர். அப்போது ஏற்பட்ட தகராறில் செல்லத்துரை அரி வாளால் சக்திவேலை வெட்டிக் கொலை செய்தார்.  இச்சம்பவம் குறித்து தேவாரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.அரசு தரப்பு  வழக்கறிஞராக எம்.சுகுமாறன் ஆஜரானார். விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சஞ்சய் பாபா, கொலை யாளி செல்லத்துரைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயி ரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

ஆதித்தமிழர் ஆர்ப்பாட்டம்  

தேனி,ஜன.12-  சட்டமன்ற மரபை மீறி நடந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தேனியில் போராட்டம் நடத்திய ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்த 12 பேரை காவல்துறை யினர் கைது செய்தனர். இப்போராட்டத்திற்கு தேனி கிழக்கு, மேற்கு மாவட்டச் செயலாளர்கள் வீ.பெ.சுரேஷ்,  மணி ஆகியோர் தலைமை வகித்தனர்.  நிர்வாகிகள் மா. நீலக்கனலன், மா.ஈஸ்வரன், மா.சுருளி , அர்ஜுன்  ஆகி யோர் பேசினர். ஆளுநரின் உருவ பொம்மையை எரிக்க  முயன்ற போது காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்து 12 பேரை கைது செய்தனர்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு: நகல் எரிப்பு போராட்டம்

மதுரை, ஜன.12-  அரசு அறிவித்த சீருடை தொழிலாளர்களுக்கு வழங்கக்  கோரி போராட்டத்தில் பங்கேற்ற 280 பேருக்கு ஆப்சென்ட் போட்டு சம்பள பிடித்தம். சஸ்பென்சன், டிரான்ஸ்பர்,  அதீத தண்டனை என்ற அதிகாரிகளின்  அடாவடித் தனத்தை கண்டித்து அரசு போக்குவரத்து மதுரை தொழி லாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் வியாழனன்று  தலைமை யகம் முன்பு குற்றச்சாட்டு நகல் எரிப்பு போராட்டம் நடை பெற்றது. இப்போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் பி. எம். அழகர்சாமி தலைமை வகித்தார். துவக்கி வைத்து பொதுச் செயலாளர் ஏ. கனகசுந்தர் பேசினார். மாநில சம்மேளன  துணைத் தலைவர் வீ. பிச்சை சிறப்புரையாற்றினார். பொரு ளாளர் மாரியப்பன்,  துணைத் தலைவர் ஜி. ராஜேந்தி ரன், துணை பொதுச் செயலாளர்கள் மணிமாறன், செல்வ ராஜ், மகாதேவன், டி. கே. முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். குற்றச்சாட்டு நகலை எரித்த போது காவல்  துறையினர் தடுக்க முயற்சித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

600 சிறப்பு பேருந்துகள்  கூடுதல் வழித்தடத்தில் இயக்கம்  போக்குவரத்து  மேலாண்மை இயக்குநர் தகவல்

மதுரை, ஜன.12-  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில்  மதுரை  பெரியார் பேருந்து நிலையத்தில்  சாலை பாது காப்பு வார விழிப்புணர்வு பேரணியை  போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் ஆ.ஆறுமுகம் ஜனவரி 12 அன்று தொடங்கி வைத்து, பேருந்து பயணிகளிடம் விழிப்புணர்வு  பிரசுரங்களை வழங்கினார்.  பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொங்  கல் பண்டிகையை  முன்னிட்டு 600 சிறப்பு பேருந்துகள்  கூடு தல் வழித்தடத்துடன் இயக்கப்படுகின்றன. மக்களின் நல னைக் கருத்தில் கொண்டு பயணிகள் பாதுகாப்பாக பய ணம் மேற்கொள்ள முக்கிய பேருந்துநிலையங்களில்  கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்கழகத்தில் உள்ள பணிமனைகளின் எண்ணிக்கை  40 ஆகும். இக்கழகத்தில் உள்ள மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 2300. இப்பேருந்துகளில் பயணிகளை பொறுத்தவரை 10.61 இலட்சம் நாளொன்றுக்கும், 318.30  லட்சம் பயணிகள் மாதந்தோறும் பயன்படும் வகையில்  இயக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர்  அறிவித்த முக்கிய  திட்டமான மகளிர் கட்டணமில்லா பேருந்துகளில் தினசரி  5 லட்சம் மகளிர்கள் கட்டணமில்லா பயணம் செய்து வரு கிறார்கள்.  மேலும் உயிர்ப்பலி விபத்து ஏற்படுத்திய கழக  மற்றும் தனியார் ஓட்டுநர்களுக்கு நவீன தொழில் நுட்பத்து டன் கூடிய சிறந்த ஓட்டுநர் பயிற்சி வழங்கப்பட்டு வரு கிறது. 500 நபர்களுக்கு மேல் மக்கள் தொகையைக் கொண்ட அனைத்து கிராமங்களுக்கும் இக்கழகம் பேருந்து சேவையினை தொடர்ந்து வழங்கி வருகிறது என்று தெரிவித்தார்.  

திரையரங்குகளில் கூடுதல் கட்டணம்  வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்: தேனி ஆட்சியர்

தேனி, ஜன.12- தேனி மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் நிர்ண யம் செய்யப்பட்டதிலிருந்து கூடுதல் கட்டணம் வசூ லித்தால் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சி யர் க.வீ.முரளீதரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:  தமிழ்நாடு  திரையரங்கு  (ஒழுங்குமுறைகள்) சட்டம்  1955 மற்றும் தமிழ்நாடு திரையரங்குகள் ஒழுங்குமுறை விதிகள் 1957 இன்படி  தேனி   மாவட்டத்தில்    உள்ள  திரை யரங்குகளில் புதிய திரைப்படங்கள்  வெளியிடப்படும் போது  நிர்ணயிக்கப்பட்ட விலையினை விட கூடுதலாக    வசூல்  செய்தால் 04546-261093 என்ற தொலைபேசி  எண்  ணிலோ அல்லது   1077 என்ற   கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ புகார் தெரிவிக்கலாம் இது   தொடர்பாக  புகார் வரப்பெற்றால் சம்பந்தப்பட்ட  திரையரங்குகள் மீது தமிழ்நாடு திரையரங்கு  (ஒழுங்கு முறைகள்) சட்டம் 1955 மற்றும் தமிழ்நாடு திரையரங்கு கள் ஒழுங்குமுறை விதிகள் 1957ன் கீழ் உரிய நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமையாளர் தொடர்ந்து பிடிவாதம்

நெசவாளர் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி

தேனி, ஜன. 12- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விசைத்தறி தொழிலாளர் ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தை தோல்லியடைந்தது. ஆண்டிபட்டி ஜக்கம்பட்டி, டி.சுப்புலா புரம் ஆகிய பகுதிகளில் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தக் கோரி கடந்த ஜனவரி  2-ஆம் தேதி முதல் விசைத் தறி நெசவா ளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். நெசவாளர்கள்  ஊதிய உயர்வு குறித்து ஆண்டிபட்டி  வட்டாட்சியர் அலுவலகம், திண்டுக்கல்  தொழிலாளர் நலத் துறை இணை ஆணையர் அலுவலகம் ஆகியவற்றில் விசைத்தறி கூட உரிமையாளர்கள், விசைத் தறி நெசவா ளர்கள் மற்றும் தொழிற் சங்க பிரதிநிதி களுக்கு இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது. இந்த நிலையில், தேனி மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் ஆட்சியர் க.வீ.முரளீ தரன், திண்டுக்கல் தொழிலாளர் நலத் துறை  இணை ஆணையர் கோவிந்தன் ஆகியோர்,  விசைத் தறி நெசவாளர்களின் ஊதிய  உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கை கள் குறித்து விசைத் தறி கூட உரிமையா ளர்கள், நெசவாளர்கள் மற்றும் தொழிற் சங்க  பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதில், விசைத் தறி கூடங்களில் பணி யாற்றும் நெசவாளர்களுக்கு 14 சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவது என்று விசைத்  தறி கூட உரிமையாளர்கள் தரப்பில் தெரி விக்கப்பட்டது. வீடுகளில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் நெசவா ளர்களுக்கும் ஊதிய உயர்வு மற்றும் சலு கைகளை நிர்ணயிக்க வேண்டும் என்று நெசவாளர்கள் மற்றும் தொழிற் சங்க பிரதி நிகள் வலியுறுத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சு வார்த்தை தோல்வி யடைந்தது. நெசவாளர்கள் ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்த அடுத்த கட்ட பேச்சு வார்த்தை திண்  டுக்கல் தொழிலாளர் நலத் துறை இணை ஆணையர் அலுவலகத்தில் ஜனவரி 18-ஆம்  தேதி நடைபெறும் என்று அதிகாரிகள் தரப்  பில் தெரிவித்தனர்.