சின்னாளபட்டி, ஜன.23- திண்டுக்கல் மாவட்டம் கொடைக் கானல் ரோடு ரயில் நிலையம் சிறுமலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு அடர்த்தியான மரங்கள் உள் ளன. அதிக பழக்கடைகள் மற்றும் ரயில் பய ணிகள் வீசியெறியும் உணவுக்காக அப்பகுதி யில் அதிகளவு குரங்குகள் சுற்றித்திரிகின் றன. ஜனவரி 23 ஞாயிறு முழு ஊரடங்கால் அனைத்து வகையான கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும் ரயில் பயணி களும் அதிகளவில் வராததால் இப்பகுதி யிலுள்ள 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் உணவின்றி சுற்றித்திரிகின்றன. பசியால் ரயில் நிலையத்தில் உணவுப் பண்டங்களை உண்டபின் கீழே போடப் பட்டுள்ள பிளாஸ்டிக் காகிதங்களை உண்டு வருகின்றன. மேலும் சில குரங்குகள் பசி யால் ஆபத்தான மெல்லிய ப்ளாஸ்டிக் காகி தங்களை உண்பது காண்போரை கலங்கச் செய்கிறது. இது குறித்து வனத்துறையினர் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வன விலங்குகளை காக்க வேண்டும் என பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.