தேனி, ஏப்.17- தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் கிராமப்புற உழைக்கும் மக்கள் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். திராட்சை அறுவடைக் காலங்களில் மட்டும் குறைந்த எண்ணிக்கை யில் வேலை கிடைக்கிறது. மீதமுள்ளவர்களின் சிலர் கேரளாவில் ஏலத் தோட்டங்களை நம்பி இருக்கிறார்கள். உழைப்பாளி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.வி. அண்ணாமலை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி. வெங்கடேசன், ஏரியா செயலாளர் கே.ஆர்.லெனின், ஏரியாக்குழு உறுப்பினர் கே.முருகன், கேகேபட்டி கிளைச் செயலாளர்கள் மணிகண்டன், சுரேஷ், என்.டி.பட்டி கிளைச் செயலாளர் மணிகண்டன், விதொச மாவட்டத் தலைவர் சி. வேலவன் மாவட்டச் செயலாளர் எல்.ஆர்.சங்கரசுப்பு, விதொச ஏரியா பொருளாளர் லட்சுமி அம்மாள், ஏரியா செயலாளர் காஜா மைதீன், ஏரியா துணைத் தலைவர் கருப்பசாமி, கேகே பட்டி பேரூராட்சி மன்ற உறுப்பினர் எஸ் பன்னீர்வேல், க.புதுப்பட்டி பேரூராட்சி மன்ற உறுப்பினர் பிரதிபா. சிஐடியு ஏரியா செயலாளர் வி.மோகன்,வாலிபர் சங்க ஏரியா தலைவர் நித்திய குமார் பி.லட்சுமி, ஆர்.ரஞ்சித், கே.முருகேஸ்வரி, கே.என் மாயாண்டி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர் பேரூராட்சி நிர்வாகம் உறுதி தகவலறிந்து கே.கே.பட்டி பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் கஸ்தூரி பாஸ்கரன் போராட்டக் களத்திற்கு வந்து பேரூராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு அர சுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து காத்திருப்புப் போராட்டம் நிறைவு பெற்றது.