districts

img

15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் நடைபயணம்

திண்டுக்கல், மார்ச் 22- குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ 26 ஆயிரம் வழங்க சட்டமியற்ற வேண்டும். அனைத்து விவ சாய விளை பொருட்க ளுக்கும் உற்பத்தி செலவு க்கு மேல் 5 விழுக்காடு உயர்த்தி வழங்கிட சட்ட மியற்ற வேண்டும். நான்கு  தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறை யை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பிருந்து நடைபயணம் துவங்கியது.  சிஐடியு. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கம் உள்ளிட்ட அமை ப்புகள் சார்பில் நடைபெற்ற நடைபயணத்திற்கு தோல் பதனிடும் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சி.பி.ஜெயசீலன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட் டச்செயலாளர் கே.பிர பாகரன், விவசாய சங்க மாவட்டத்தலைவர் என்.பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். நடை பயணம் பேருந்து நிலை யத்தில் துவங்கி மணிக் கூண்டு வழியாக பேகம் பூரை அடைந்தது.