districts

img

இலவச நிலம், வீடு வழங்க திருநங்கைகள் கோரிக்கை

விருதுநகர், மே 23- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு அரசு சார்பில் இலவச நிலம் மற்றும் அதில் வீடுகளைக் கட்டித் தர வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கோரி க்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து திருநங்கை கள் கூறியதாவது, விருது நகர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகளுக்கு வாடகை வீடுகள் வழங்க வீட்டின் உரிமையாளர்கள் மறுக்கின்றனர். எனவே, இல வச நிலம் மற்றும் அதில் வீடு களைக் கட்டித்தர வேண்டும்  என கோரிக்கை விடுத்தி ருந்தோம். இதையடுத்து, இராஜபாளையம் பகுதியில் 13 பேருக்கும், திருவில்லி புத்தூரில் 10 பேருக்கும் மட்  டும் தலா சுமார் இரண்டு சென்ட் நிலம் அரசு சார்பில்  இலவசமாக வழங்கப்பட் டது. 25 பேருக்கு நிலம் வழங்கப்படவில்லை. நிலம் கிடைக்காதவர்களுக்கு இல வச நிலமும், நிலம் கிடைத்த வர்களுக்கு அதில் வீடுக ளைக் கட்டித் தரவும் மாவட்ட  நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.