நாகர்கோவில், ஜுன் 18 சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கோடை விடுமுறை முடிந்து கடந்த 12 மற் றும் 14 ஆகிய தேதிகளில் பள்ளிகூடங்கள் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி கடந்த சில நாட்களாக வெறிச்சோடி காணப்பட்டது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மக்கள் குடும்பத்து டன் கன்னியாகுமரிக்கு வந்தனர் .திரி வேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் ஞாயிறு அதிகாலையில் சூரி யன் உதயமாகும் காட்சியை காண ஏராள மான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்த னர். கடல் நடுவில் அமைந்துள்ள விவே கானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திரு வள்ளுவர் சிலையை பார்வையிட காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக 2 மணி நேரம் தாம தமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு காலை 10 மணிக்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர். வட்டகோட்டைக்கு சுற்றுலா பய ணிகள் உல்லாச படகு சவாரி செய்தனர். இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதி யில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாது காப்பு குழும போலீசாரும், தீவிர கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.