districts

img

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் ஆய்வு

தூத்துக்குடி , ஏப். 29 தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை தமிழக அர சால் நியமிக்கப்பட்ட அதிகாரி ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சி பகு தியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணி களை கண்காணிப்பதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் படி அறிவிக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் அதி காரி டேவிட் தார் ஆய்வு மேற் கொண்டார். இதன்படி வல்லநாடு பகுதியில் உள்ள பம்பிங் ஸ்டேஷன், மீன்வளக் கல்லூரி அருகில் நடைபெற்று வரும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள், உரக்கிடங்கு பணி களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பிறகு அம்பேத்கர் நகர், ஸ்டேட் பாங்க் காலனி, எட்டயபுரம் ரோடு ஹவுசிங் போர்டு காலனி ஆகிய பகுதி களில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை, கழிவுநீர் கால்வாய்  பணிகள், பூங்கா பேருந்து நிழற் குடை மற்றும் பல பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, செயற்பொறி யாளர் ரூபன் சுரேஷ் பொன் னையா, உதவி ஆணையர்கள் சேகர், சரவணன், மற்றும் பிரின்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.