பழனி, ஜன. 18 பழனியில் செவ்வாயன்று பக்தர்களின்றி தேரோட்டம் கோயில் வளாகத்துக்கு உள்ளேயே நடைபெற்றது. இந்த முறை கொரோனா காரண மாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் பெரிய நாயகியம்மன் கோயில் வளாகத்திலேயே சிறிய கட்டை தேர் இரண்டு கோவிலுக்கு உள்ளேயே சுற்றி வந்தது. தெப்பத் திருவிழாவும் நடைபெற்றது. கோயி லுக்குள் பக்தர்களைஅனுமதிக்காமல் உள்ளதால் அவர்கள் கிரி வல வீதி மற்றும் கோவில் வெளி வளாகத்தில் வந்து செல்கின்றனர். புதன்கிழமை முதல் கோவிலில் வழிபாடு செய்ய அனுமதிப்பார் கள் என்று கருதி செவ்வாயன்று பழனியில் பக் தர்கள்தங்கி விட்டனர். இதனால் பழனியில் பக் தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.