districts

மதுரையில் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் இல்லை

மதுரை, ஜூன் 7-  சென்னை சேப்பாக்கத்தில் உள்ளது போல் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம் தென் தமிழகத்திலும் அமைக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  இந்நிலையில் தென் மாவட்டங்களின் தலைமையிடமான மதுரை மாவட்டத்தில் உலகத்தரத்தில் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படுமா என்பது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையத்திடம் மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஹரி விக்னேஷ்  என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத் தின் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு அளித்துள்ள பதிலில், மதுரை மாவட்டத்தில் சர்வதேச அளவில் கிரிக்கெட் மைதானம் அமைப்பது குறித்து எந்தப் பரிசீலனையும் இல்லை. இனி வரும் காலங்களில் ஏதேனும் மைதா னம் அமைப்பது குறித்து மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகளை அணுகி  அதற்கான நடவடிக்கைகளை மேற்  கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டி ருக்கிறது. இது மட்டுமில்லாமல் தமிழக முழுவதும்  சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைப்ப தற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று  வருவதாகவும் தற்போது வரை தமிழ கத்தில் 29 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 208 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான பணி கள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.