districts

img

காஜா பீடிக் கம்பெனி முற்றுகை

திருநெல்வேலி, ஜூலை 3- தொழிலாளர்களிடம் பிடிக்கப்பட்ட பிஎப் பணத்தை கட்ட கோரி டவுன் தலைமை  அலுவலகம் முன்பு சிஐடியு தலைமையில் காஜா பீடி சுற்றும் பெண்கள் திங்களன்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் மாரி செல்வம், மேலப்பாளை யம் பகுதி தலைவர் குழந்தைவேலு ஆகி யோர் தலைமை வகித்தனர். சிபிஎம் தாலுகா செயலாளர் நாராயணன் நிறைவு ரையாற்றினார். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில், ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் விடுமுறை சம்பளம் வழங்குவது, ஜூலை மாத இறுதியில் போனஸ் வழங்குவது, தொழிலாளர்களிடம் பிடிக்கப்பட்ட பிஎப் பணத்தை விரைவில் கட்டுவது, தரமான இலை வழங்குவது என்று முடிவு செய்யப் பட்டது.

;