விருதுநகர், ஜூலை 2- தமிழகத்தில் கொள்கை உறுதி கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களை பாஜகவினரால் விலைக்கு வாங்கிவிட முடியாது என்றும்ன சனா தனத்தின் முதுகெலும்பை உடைக்கும் போராட்டத்தை சிவப்பு, கருப்பு, நீலம் கூட்டணி நடத்தும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார். விருதுநகர் தேசபந்து மைதானத்தில் திராவிடர் கழகம் சார்பில் வைக்கம் போராட் டத்தின் நூற்றாண்டு விழா, காமராஜர் 121 வது ஆண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடை பெற்றது. அதில் கி.வீரமணி பேசியதாவது : வட மாநிலங்களில் பாஜகவினர் எம்எல்ஏக்ளை விலைக்கு வாங்கி குறுக்கு வழியில் ஆட்சி யை கைப்பற்றி வருகின்றனர். தமி ழகத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் கொள்கையில் உறுதி கொண்டவர்கள். அவர்களை விலைக்கு வாங்கி விட முடி யாது என்றார். மேலும் பேசுகையில் , தமிழகத்தில் இராஜகோபலாச்சாரியார் முதலமைச்ச ராக இருந்த போது குலக்கல்வியை கொண்டு வர வேண்டும் எனக் கூறினார். அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. பின்பு, காமராஜரிடம் தந்தை பெரி யார் முதலமைச்சர் பொறுப்பை ஏற்கும்படி வலியுறுத்தினார். அவர் முதல்வராக வந்தவுடன் சாதி மத வேறுபாடின்றி ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் கல்வி கிடைக்கும் வகையில் ஏராளமான பள்ளிக் கூடங்களை உருவாக்கினார். மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். ஒரு வேளை குலக்கல்வித் திட்டம் அமலாகி யிருந்தால் தமிழகம் இந்த அளவுக்கு முன்னேறியிருக்காது. அனைவரும் கல்வி கற்கும் உரிமையை பெற்றுத் தந்தது திரா விடர் கழகம்.
இப்போது நாம் அனைவரும் நீட் தேர்வுக்கு எதிராக போராடி வருகிறோம். இத்தேர்வால் நம் வீட்டுப் பிள்ளைகள் தற்கொலை செய்து உயிரை விடுகின்ற னர். ஆனால், ஈவு இரக்கமில்லாத மனம் கொண்டவர்கள் ஒன்றிய ஆட்சியாளர்கள். பாஜகவினரை எதிர்க்க தமிழகத்தில் கொள்கை கூட்டணி உருவாகியுள்ளது. இக் கூட்டணி பதவிக்கான கூட்டணி அல்ல. சிவப்பு, கருப்பு, நீலம் ஆகிய கூட்டணி சேர்ந்த சனாதனத்தின் முதுகெலும்பை உடைக்கும் போராட்டத்தை தொடர்ந்து நடத்தும். கர்நாடகா மாநிலத்தை எங்களின் பரிசோதனைக் களம் என பாஜக கூறி வந் தது. தற்போது தென் மாநிலங்களுக்குள் நுழைய முடியாத வகையில் கதவு மூடப் பட்டு விட்டது.இந்த மண்ணில் வர்ணாசிர மத்தை ஒழித்து எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். சமூகநீதியை நிலை நாட்ட வேண்டும் என்று தெரிவித்தார். முன்னதாக நடைபெற்ற விழாவிற்கு தி.க. மாவட்ட தலைவர் நல்லதம்பி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அர்ஜுனன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் லிங்கம் ஆகி யோர் உட்பட பலர் பங்கேற்றனர்.