ஜெர்மனி, ஜூன் 26- 48வது ஜி7 மாநாடு ஜெர்மனியில் நடை பெறுகிறது. இதில், ‘சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும்’ என, ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸ் அழை ப்பு விடுத்தார். அதை ஏற்று ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜெர்மனி சென்றார். முனிச்சி விமான நிலையத்தில் அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி காவேரி யின் குழுவினர் இசை நிகழ்ச்சி நடத்தி பிரத மர் மோடியை வரவேற்றனர். இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல், எரிசக்தி, காலநிலை, உணவு பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம், ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசுகிறார். பின்னர் ஜூன் 28-ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு செல்கிறார். அங்கு அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஷேக் கலிபா பின் ஜயீத் அல் நஹ்யன் மறைவுக்கு இரங்கல் தெரி விக்கும் மோடி, புதிய ஜனாதிபதியாகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் தேர்ந்தெ டுக்கப்பட்ட ஷேக் முகமது பின் சயீத் அல் ரஹ்யானை சந்தித்து பேசுகிறார்.