மதுரை,மார்ச் 18- மதுரை-நத்தம் பறக்கும் பாலத்தின் 188 தூண்களிலும் தமிழ்நாடு மற்றும் மது ரையின் பெருமை விளக்கும் கலைநயமிக்க சிலைகள் மற்றும் ஓவியங்கள் இடம்பெற உள்ளன என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறினார். தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணை யம், ஒன்றிய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் மதுரை தல்லாகுளம் பகுதியில் இருந்து நத்தம் வரை 35 கிலோமீட்டருக்கு 1,028 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் மற்றும் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது . இப்பணிகளை மார்ச் 18 சனிக்கிழமையன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அதிகாரிகளு டன் ஆய்வு செய்தார். மதுரை பாண்டியன் ஓட்டலில் இருந்து ஊமச்சிகுளம் இடையேயான 7.3 கிமீ தூரத் திற்கு பறக்கும் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. பறக்கும் பாலப்பணி 2018 நவம்பரில் துவங்கியது. 2 ஆண்டுகளில் முடிக்க வேண் டிய இப்பணி கொரோனா காரணமாக 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது. பறக்கும் பாலத்திற்காக மொத்தம் 192 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த தூண்களை அழகுபடுத்தும் விதமாக மது ரையின் அடையாளமாக திகழும் மதுரை மீனாட்சியம்மன், வைகை ஆற்றில் தங்கக் குதிரையோடு எழுந்தருளும் அழகர் போன் றவற்றின் சிலைகள் அமைக்கப்பட்டு வரு வதோடு, ஜல்லிக்கட்டு, திருவள்ளுவர் ஓவி யங்களும் வரையப்பட்டு வருகின்றன. தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தவிர்க்கும் விதமாக இத்தகைய பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
மதுரை கலைஞர் நூலகப்பகுதியில் இருந்து செட்டிகுளம் வரையிலான 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள 188 தூண்களில் நடைபெற உள்ள கலை வேலைப்பாடுகள் குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து ஆய்வு மேற்கொண்டார். பாலத்தின் அனைத்து தூண்களின் நாற்புறத்திலும் தமிழ்நாடு மற்றும் மதுரை யின் பெருமை விளக்கும் கலைநயமிக்க சிலைகள் மற்றும் ஓவியங்கள் அமைக்கப் பட உள்ளது குறித்து கேட்டறிந்தார். குறிப்பாக தமிழ்நாடு மற்றும் மதுரை யின் பண்பாட்டு கலைப்படைப்புகள் இடம் பெற வேண்டும் என அதிகாரிகளிடம் தெரி வித்தார். பின்னர் சு.வெங்கடேசன் எம்.பி., செய்தி யாளர்களிடம் பேசுகையில், மதுரை-நத்தம் பறக்கும் பாலப் பணிகள் முடிந்துவிட்டன. விரைவில் ஒன்றிய அமைச்சர்கள் பாலத்தை திறந்து வைக்க உள்ளனர். பாலத்தின் தூண் களில் தமிழ்நாடு மற்றும் மதுரையின் பண் பாட்டு பெருமையை விளக்கும் கலைப் படைப்புகள் 188 தூண்களில் இடம்பெற உள்ளது. மதுரையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலங்கள் மற்றும் கீழடி அகழாய்வு ஓவியங்கள், ஜல்லிக்கட்டு போன்ற கலைநயமிக்க ஓவியங்களும் சிற்பங்களும் இதில் இடம் பெற உள்ளது. அதேபோல் 188 தூண்களிலும் திருக்குறள் வாசகங்கள் பொறிக்கப்படுவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது. பாலத்தின் கீழ் பகுதியில் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் இந்த ஓவியங்கள் மற்றும் திருக்குறள் போன்றவைகளை கண்டு களித்துக் கொண்டே செல்லலாம். அந்த வகையில் ஆலோசனைகள் வழங்கப் பட்டுள்ளது என்று கூறினார். ஆய்வின்போது திமுக மாவட்ட செயலா ளரும் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பி னருமான கோ. தளபதி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலா ளர் மா. கணேசன் மற்றும் அதிகாரிகள் உட னிருந்தனர்.