districts

img

முதல் பரிசை வென்ற வெள்ளோடு தப்பாட்டக் கலைஞர்களுக்கு ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு

சின்னாளபட்டி, ஜன.1- மாவட்ட அளவில் முதல் பரிசை வென்ற வெள்ளோடு தப்பாட்ட கலைஞர்களுக்கு ஊர் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித் தனர்.  திண்டுக்கல் மாவட்டம், அ.வெள்ளோட் டில் பழனிசாமி என்பவர் தலைமையில் அன்னை தப்பாட்ட கலைக்குழு செயல் பட்டு வருகிறது. கடந்த வாரம் தமிழக அள விலான விடியல் கலை திருவிழா போட்டி கள் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்ட அளவில் அ.வெள் ளோடு அன்னை தப்பாட்ட கலைக்குழு அணி முதல் பரிசை பெற்று கேடயமும், சான்றித ழையும் பெற்றது.   முதல் பரிசு பெற்ற தப்பாட்ட கலைஞர் களை புத்தாண்டு தினத்தன்று  வெள்ளோடு ஊர் பொது மக்கள் சார்பிலும், புனித சந்தி யாகப்பர் ஆலய நிர்வாகம் சார்பிலும் உற் சாக வரவேற்பு அளித்து, பாராட்டும் விழா வும் நடைபெற்றது.  ஊர் நாட்டாண்மை யாக்கோப், மணி யம் அருளானந்து மற்றும் ஊர் நிர்வாகி கள், பொதுமக்கள் தப்பாட்ட கலைஞர் களுக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். பின்னர் புனித சந்தி யாகப்பர் கோவிலில் பாராட்டு விழா நடை பெற்றது. இதில் பங்கு பாதிரியார் ஜஸ்டீன் திரவியம் மற்றும் பலர் பாராட்டிப் பேசி னர்.