மதுரை, டிச.30- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் மலைச்சாமி. இவர் தனது ஊராட்சி பகுதியான மேற்கு தெருவில் ரூ.1.54 லட்சம் செலவில் புதியதாக பேவர் பிளாக் சாலை அமைக்க ஒன்றிய அரசின் 15ம் நிதிக் குழுவினரிடம் விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் சாலை அமைக்கும் பணியை தொடங்கிய சில நாட்களிலேயே பணிகள் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படு கிறது. இதனால் சாலை அமைப்பதற்காக அப்பகுதி தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், பொதுமக்கள் சிரமத்திற் குள்ளாகினர். தற்போது பேவர்பிளாக் சாலை பணி முடிவடைந்துவிட்டதாக திட்ட மதிப்பிடு பலகையை வீட்டின் சுவர் ஒன்றில் எழுதியதாக கூறப்படுகிறது. எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் பணி கள் முடிந்தபின்னரே திட்ட மதிப்பிடு பலகை, விளம்பரம் செய்யப்படும். ஆனால், பணி முடிக்கப்படாமல் மதிப்பீடு போட்டு எழுதப்பட்ட தால் பெரும் சர்ச்சை எழுந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டபோது, தனக்கு எதுவும் தெரியாது என்றும், உடனடியாக அதை அழிக்க சொல்கிறேன் எனவும் கூறியதாக கூறப்படுகிறது. மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊராட்சி மன்ற தலைவர் மலைச்சாமி உடனடியாக பணிகள் முடிந்ததாக எழுதப்பட்ட திட்ட மதிப்பிட்டு பலகையை அழிக்க உத்தர விட்டார். உடனடியாக திட்ட மதிப்பிடு பலகை அழிக்கப்பட்டது.