தூத்துக்குடி,மார்ச் 26 தூத்துக்குடி கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி பெற்றுள்ள 30 நபர்களுக்கு நகைகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார். தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி பெற்றுள்ள 30 நபர்களுக்கு நகைகளை மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ.சண்முகையா, மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார், தூத்துக்குடி யூனியன் சேர்மன் வசுமதி அம்பாசங்கர், தூத்துக்குடி கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், கூட்டுறவு இணை பதிவாளர் முத்துக்குமாரசாமி, கூட்டுறவு துணைப் பதிவாளர் ரவீந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.