வைகையாற்றில் மூழ்கி பலியானோரின் அடையாளம் தெரிந்தது
மதுரை, மே 6- மதுரை வைகையாற்றில் மூழ்கி உயிரிழந்த இருவரின் அடையாளம் காணப்பட்டது. மே 5 வியாழனன்று கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை பார்க்க வந்த 3 பேர் வைகை யாற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இதில் இருவரின் அடை யாளம் காணப்பட்டுள்ளது ஆழ்வார்புரம் தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்த நபர் மதுரை கரிமேடு பகுதியை சேர்ந்த அருள்ஞான பிரகாஷ் என்ற ஆட்டோ ஓட்டுனர் என்பதும், கல்பாலம் அருகே சடலமாக மீட்கப்பட்ட நபர் மதுரை திருமங்கலம் வடகரை புதூர் மேலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கார் மெக்கானிக் சுதாகர்(23) என்பதும் அடையாளம் காணப் பட்டுள்ளது.
சாத்தூர் அருகே தீவிபத்தில் சுமை தூக்கும் தொழிலாளி பலி
சாத்தூர், மே 6- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே வீட்டில் தீப்பற் றிய விபத்தில் தொழிலாளி உடல் கருகி உயிரிழந்தார். சாத்தூர் அருகே உள்ள கஞ்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கையா மகன் ஜோசப் (38). இவர் கோவில்பட்டியில் சுமை தூக்கும் தொழில் செய்து வந்தார். இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலை யில், ஜோசப் வீட்டிலிருந்து பயங்கர சத்தத்துடன் தீப்பற்றி எரிந்து,புகை வந்துள்ளது. இதையடுத்து அப்பகுதி யினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த னர். இந்த விபத்தில் ஜோசப் தீயில் கருகி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மே 9 மதுரை மண்டலம் 5-இல் பொதுமக்கள் குறைதீர் முகாம்
மதுரை, மே 6- மதுரை மாநகராட்சி மண்டலம் 5-இல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற உள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறை களை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ் வாய்க்கிழமை வார்டு மறுவரையறை செய் யப்பட்ட ஐந்து மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. அதன்படி மே 9 செவ்வாய்க்கிழமை யன்று திருப்பரங்குன்றம் நகர்ப்புற சுகா தார நிலையம் அருகில் (தியாகராசர் பொறி யியல் கல்லூரி செல்லும் வழி) உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 5 (மேற்கு) அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் தலைமையில் நடைபெற உள்ளது. (மண்டலம் 5 (மேற்கு) உட்பட்ட வார்டு பகுதிகள்: வார்டு எண்.71 மாடக் குளம், வார்டு எண்.72 முத்துராமலிங்கபுரம், வார்டு எண்.73 முத்துப்பட்டி அழகப்பன் நகர் மெயின் ரோடு, வார்டு எண்.74 பழங்கா நத்தம், வார்டு எண்.78 கோவலன் நகர், டி.வி.எஸ்.நகர் மெயின் ரோடு, வார்டு எண்.79 தென்னகரம், ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு, வார்டு எண்.80 வீரகாளி யம்மன் கோவில் தெரு, வார்டு எண்.81 ஜெய்ஹிந்த்புரம், வார்டு எண்.82 சோலை யழகுபுரம், வார்டு எண்.83 எம்.கே.புரம், வார்டு எண்.84 வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வார்டு எண்.91 மீனாட்சி நகர் அவனியாபுரம், வார்டு எண்.92 பாம்பன் சுவாமி நகர், வார்டு எண்.93 பசு மலை, வார்டு எண்.94 திருநகர், வார்டு எண்.95 சௌபாக்யாநகர், வார்டு எண்.96 ஹார்விப்பட்டி, வார்டு எண்.97 திருப்ப ரங்குன்றம், வார்டு எண்.98 சன்னதி தெரு, திருப்பரங்குன்றம், வார்டு எண்.99 பாலாஜி நகர், வார்டு எண்.100 அவனியாபுரம் அருப் புக்கோட்டை மெயின் ரோடு ஆகிய வார்டுகள்). இந்த குறைதீர்க்கும் முகாமில் பொது மக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனு மதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து 10 பேர் தனுஷ்கோடி வருகை
இராமேஸ்வரம், மே 6- இலங்கையின் முல்லைத்தீவு பகுதியில் இருந்து மூன்று குடும்பங்களை சேர்ந்த நான்கு குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் படகு மூலம் தனுஷ்கோடி வந்தனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளா தார நெருக்கடியால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியை சேர்ந்த தமிழர்கள் அகதிகளாக படகு மூலம் தனுஷ்கோடி வருகின்றனர். விசாரணைக்கு பின் மண்டபம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையங்களில் பாது காப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கையில் இருந்து 10 பேர் அகதிகளாக தனுஷ்கோடி அருகே ஒன்றாம் மணல் தீடைக்கு படகு மூலம் சனிக் கிழமை வந்தனர். இது குறித்து தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து, தனுஷ்கோடி சென்ற போலீசார் 10 பேரையும் மண்டபம் கடலோரபாதுகாப்பு குழும காவல் நிலை யம் அழைத்து வந்து விசாரணை மேற் கொண்டனர். இதில், இலங்கையில் முல்லைத்தீவு குடியிருப்பு பகுதியை சேர்ந்த சாருஜன் (23), மனைவி அம்பிகா(22), மகன் ஜான் அட்ரீயன்(01), சசிகுமார்(43),மனைவி கலைச்செல்வி(38),ரஜிதன்(17) ,அபிசாக் எஸ்ரேன், (5 மாத குழந்தை), அக்கினேஷ் வரி(75),யானுஜா(32),ஸ்லியா(9) மூன்று குடும்பங்களை சேர்ந்த நான்கு குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் தலை மன்னாரில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி வந்ததாக தெரிவித்தனர். மேலும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உணவுப்பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும்,போதிய பொருட் கள் கிடைக்காத நிலை காணரமாக வந்த தாகவும் தெரிவித்தனர். உளவுத்துறை போலீசார் விசாரணைக்கு பின் மண்டபம் கேம்ப் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்க உள்ளதாக போலீ சார் தெரிவித்தனர்.
சு.வெங்கடேசன் எம்.பி.,க்கு வாலிபர் சங்கம் நன்றி தெரிவிப்பு
மயிலாடுதுறை, மே 6- மயிலாடுதுறை ராஜன் தோட்டம் சாய் விளையாட்டு மையத்தில் கடந்த பல ஆண்டு களாக செயல்பட்டுவந்த பெண்களுக்கான கூடைப்பந்து மற்றும் கைப்பந்து பயிற்சி மையத்தை உத்தரப்பிரதேசம் மாநிலம் வார ணாசிக்கு ஒன்றிய பாஜக அரசு மாற்றிய நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம் தெரிவித்து தொடர் போராட்டங் களை நடத்தியது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் இதற்கு கண்டனம் தெரி வித்ததோடு, விளையாட்டு மையத்தை மீண்டும் மயிலாடுதுறைக்கே கொண்டுவர வேண்டுமென இந்திய விளையாட்டு ஆணை யத்துக்கு கோரிக்கை விடுத்தார். இதைய டுத்து பெண்களுக்கான கூடைப்பந்து, கைப்பந்து மையம் மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாலிபர் சங்கத்தின் மயி லாடுதுறை மாவட்டச் செயலாளர் அறிவழ கன், மாவட்டத் தலைவர் ஐயப்பன் ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடனடியாக கண்டன குரல் எழுப்பி விளை யாட்டு ஆணையத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து மீண்டும் பயிற்சி மையத்தை மயிலாடுதுறைக்கே கொண்டு வந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு நன்றி தெரிவித்துள்ள னர்.
தஞ்சையில் 7 மையங்களில் நீட் தேர்வு
தஞ்சாவூர், மே 6- இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (மே.7) நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் தாமரை சர்வதேசப் பள்ளியில் 1,609, கும்பகோணம் தாமரை சர்வதேசப் பள்ளியில் 648, தஞ்சாவூர் ப்ளாசம் பப்ளிக் பள்ளியில் 495, கும்பகோணம் மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி யில் 360, கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் 648, தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 1,104, பட்டுக்கோட்டை பிரில்லியண்ட் பள்ளியில் 576 மாணவ, மாணவிகள் என மொத்தம் 5,440 பேர் நீட் தேர்வை எழுத உள்ளனர். இதையொட்டி தேர்வு மையங்களில் குடிநீர், மின்சார வசதி, போக்குவரத்து வசதிகளும், தேர்வில் முறைகேடுகள் நடை பெறாமல் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் சார்பில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், தேர்வு எழுது பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெறவுள்ளது.
நாளை முதல் மாணவர்கள் சேர்க்கை
தஞ்சாவூர், மே 6- தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2023-24 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். மே 8 ஆம் தேதி முதல் விண்ணப்பங் களை பதிவு செய்யலாம். பதிவு செய்ய இறுதி நாள் மே 19 ஆகும். மாணவர்கள் தரவரிசைப்பட்டியல் கல்லூரிக்கு மே 23 ஆம் தேதி அனுப்பப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு மே 25 முதல் 29 வரை நடை பெற உள்ளது. முதல்கட்ட பொது கலந்தாய்வு மே 30 முதல் ஜூன் 9 ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20 வரையிலும் நடைபெற உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22 அன்று தொடங்குகிறது.
இணையவழியில் விதவைச் சான்று
தஞ்சாவூர், மே 6- ஆதரவற்ற விதவைச் சான்று பெறுவதற்கு இணையவழி யில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தமிழகத்தில் ஆதரவற்ற விதவைச் சான்று வழங்கிட நேரிடை யாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு சான்றுகள் வழங்கும் நடை முறை இருந்து வந்தது. தற்போது ஆதரவற்ற விதவைச் சான்று கள் இ-சேவை மையத்தின் மூலம் இணைய வழியில் விண்ணப் பித்து இணையவழியில் சான்றுகள் வழங்கிட தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொது மக்கள் ஆதரவற்ற விதவைச் சான்று பெறுவது தொடர்பாக தங்க ளது பகுதிக்கு அருகாமையில் உள்ள இ-சேவை மையங்க ளில் இணைய வழியில் விண்ணப்பித்து, இணைய வழியில் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம்’’ எனக் கூறப்பட்டுள்ளது.
கஞ்சா பதுக்கல்: 5 ஆண்டு சிறை
தஞ்சாவூர், மே 6- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பூக்கொல்லை பகுதியிலுள்ள கருவேல மரக்காட்டுக்குள் 2021-ஆம் ஆண்டு கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்த நாகை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினர் நிகழ்வி டத்தில் விசாரணை நடத்தி, 1.25 கிலோ கஞ்சா பொட்டலங் களைக் கைப்பற்றி, பூக்கொல்லை எம்.ஜி.ஆர். நகரைச்சேர்ந்த செல்வராஜ் (65), இவரது மனைவி மங்களத்தை (52) ஆகி யோரை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் இன்றியமையா பண்டங்கள் சட்டச் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை நீதிபதி (பொ) சுந்தர்ராஜன் விசாரணை செய்து, செல்வராஜ், மங்களத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித் தார்.