districts

img

மதுரை-தேனி அகல ரயில் பாதையில் மே 26-ஆம் தேதி முதல் ரயில் சேவை தொடக்கம்

மதுரை, மே 23- 12 ஆண்டுகளுக்குப் பின் மே 26-ஆம் தேதி முதல் மதுரை - தேனி இடையே ரயில் சேவை (06701, 06702) தொடங்கப்படவுள்ளது. ரயில் சேவையை பிரதமர் மோடி சென்னையிலிருந்தே துவக்கி  வைக்க உள்ளதாக ரயில்வே வட் டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்  தில் கேரளா பகுதியில் விளையும்  ஏலக்காய் உள்ளிட்ட விளைபொருட்  களின் வியாபார தேவைக்கென போடி - மதுரை இடையிலான ரயில்  போக்குவரத்து 1928-ஆம் ஆண்டு முதல் மீட்டர் கேஜ் பாதையில் ஓடத் தொடங்கியது. போடி, தேனி, ஆண்டிபட்டி மட்டுமின்றி மதுரை வரை வழியோர ஊர்கள், உசி லம்பட்டி, கருமாத்தூர், செக்கானூ ரணி பகுதி மக்கள், மாணவர்கள், அரசு, தனியார் வேலைக்கு செல்  வோருக்கும் உதவிகரமாக இருந் தது. குறைந்த கட்டணத்தில் ஏலக் காய், பழங்கள், காய்கறிகள், இதர விவசாயப் பொருள்களை மது ரைக்குக் கொண்டு சென்று, அங்கி ருந்து பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லவும் இந்த ரயில் சேவை பயனுள்ளதாக இருந்தது. இந்த நிலையில், 2010-ஆம் ஆண்டு டிசம்பரில் மதுரை - போடி இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தண்டவாளங் களைப் பிரித்து எடுத்து, பிற ஊர்  களைப் போன்று அகல ரயில் பணி  முடிந்தது. மதுரை-போடிக்கு விரை வில் ரயில் ஓடும் என, தேனி மாவட் டம் மற்றும் செக்கானூரணி, உசி லம்பட்டி உள்ளிட்ட மதுரை மாவட்ட மக்கள் எதிர்பார்த்தனர். 

இந்நிலையில், சுமார் ரூ.450 கோடி மதிப்பிலான மதுரை - போடி  அகல ரயில்பாதை திட்டத்தில் தேனி வரை அனைத்துப் பணிகளும் தற்  போது முடிந்துள்ளன. ஏற்கெனவே மதுரை - உசிலம்பட்டி 37 கி.மீ., தூரத்தை ஜனவரி 2020-இல் பாது காப்பு ஆணையர் மனோகரனும், உசிலம்பட்டி - ஆண்டிபட்டி 21 கி.மீ., பாதையை டிசம்பர் 2020-இல் அபய்குமார் ராய் ஆகியோரும் ஆய்வு செய்தனர். ஆண்டிபட்டி-தேனி 17 கி.மீ., தூரத்தை மார்ச் 2022-ல் மத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோஜ் அரோரா ஆய்வு செய்து மூன்று மாதத்திற்குள் மதுரை- தேனிக்கு ரயில் சேவை தொடங்க லாம் என அனுமதி அளித்தார்.  இதற்கிடையில், மதுரை - தேனிக்கு முதல் கட்டமாக ரயில்  சேவை தொடங்கப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு வரும் பிரதமர் மோடி மே 26-ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்  கில் நடக்கும் விழாவில் வைத்து மதுரை-தேனி ரயில் சேவை தொடங்கி  வைக்கிறார் என செய்தி வெளியாகி இருக்கிறது.  சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கட்டமாக மதுரை - தேனி இடையே மே 26 முதல் ரயில் ஓடும் என்ற அறிவிப்பு தேனி, மதுரை  மாவட்ட மக்கள், வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘’மதுரை- தேனி இடையே அனைத்துப் பணிகளும் முடிந்து,  ரயில் ஓட்டுவதற்கு தயார் நிலை யில் இருந்தோம். பிரதமர் சென்னை யில் வைத்து ரயில் சேவையை 26-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். தேனி- போடி இடையே 15 கிலோ  மீட்டருக்கு பணி நடக்கிறது. விரை வில் அதுவும் முடிந்துவிடும். மேலும்,  மதுரை - போடிக்கு மின்சார ரயில் இயக்க அனுமதியும் கிடைத்துள் ளது. மின்மயமாக்கல் பணி விரை வில் தொடங்க இருப்பதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவி கின்றன.

மதுரை-தேனி இடையே இயக் கப்படும் ரயில் முன்பதிவில்லாத ரயிலாக இயங்கும். 12 பெட்டிகள் இணைக்க வாய்ப்புள்ளது. தினம் தோறும் மதுரையிலிருந்து காலை  8.30 மணிக்குப் புறப்பட்டு காலை  9,35 மணிக்கு தேனியை சென்றடை யும். மறு மார்க்கத்தில் மாலை 6.15  மணிக்கு தேனியிலிருந்து புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு மதுரையை வந்த டைகிறது. இந்த ரயில் மதுரையை அடுத்துள்ள வடபழஞ்சி, உசிலம் பட்டி, ஆண்டிபட்டி ஆகிய ஊர் களில் நின்று செல்லும்.

தாம்பரம் ரயில் நிலையத்தில்  தேஜஸ் விரைவு ரயில் நிற்க கோரிக்கை

தமிழகத்தில் அதிவிரைவு வண்டியாக சென்னை எழும்பூர்- மதுரை- சென்னை-எழும்பூர் தேஜஸ் ரயில் இயங்கி வருகிறது. மதுரை - சென்னை எழும்பூர் இடையே திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி சந்திப்பில் மட்டும் நின்று செல்கி றது. சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து வரும் மற்றும் விமான நிலை யத்திற்கு செல்லும் பயணிகளுக்கு ஏதுவா தாம்பரம் ரயில்நிலையத்தில் விரைவு ரயில் நின்று செல்ல நட வடிக்கை எடுக்க வேண்டும். மதுரை யிலிருந்து சென்னைக்கு செல்லும் பயணிகளில் 50 சதவீதம் பேர் தாம்ப ரம் பகுதியை சுற்றி வசிப்பவர்கள். மதுரை - சென்னை இரட்டை வழிப்  பாதையின் தரம் மிக வேக ரயில்கள் செல்ல உயர்த்தப்பட்டு உள்ளது.  சமீபகாலமாக இரு மார்க்கத்திலும்  குறைந்தது 15 நிமிடங்கள் முன்பாக  ரயில்கள் வந்தடைகிறது. எனவே அதி விரைவு வண்டிக்கு இரு மார்க்  கத்திலும் ஒரு நிமிடம் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவே வேண்டு மென டிஆர்இயூ மதுரைக் கோட்டச் செயலாளர் சங்கரநாராயணன் ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி யுள்ளார்.