டாஸ்மாக்-அகற்ற மறுப்பு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
மதுரை, ஜன.9- மதுரை மாவட்டம் தும்மக்குண்டு அருகே உள்ள டி.கரிசல்பட்டி கிராமத்தில். 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராமத்திலிருந்து 400 மீட்டர் தூரத்தில் மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது. டி.கரிசல்பட்டி யிலிருந்து தும்மக்குண்டு பள்ளிக்குச் செல்லும் மாண வர்கள் இந்த மதுபானக்கடையை கடந்துதான் செல்ல வேண்டும். பெண்கள் தனியாகச் செல்ல முடியாமல் சிர மத்திற்கு ஆளாகி வருகின்றனர். மதுபானக்கடையை அகற்றக் கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் தன்னெழுச்சியாகத் திரண்ட மக்கள் கோரிக் கையை வலியுறுத்தி மதுரை ஆட்சியர் அலுவலகத்தைத் திங்களன்று முற்றுகையிட்டனர்.
நூலகத்தை மாற்றக் கோரிக்கை
சிவகங்கை, ஜன.9- மானாமதுரை வட்டம் வேதியரேந்தல் கிராமத்தில் உள்ள நூலகத்தை அரசு உயர்நிலைப் பள்ளி அருகே மாற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மானாமதுரை ஒன்றியச் செயலாளர் ஆண்டி, வேதிய ரேந்தல் கிளைச் செயலாளர் நாகராஜன் ஆகியோர் சிவ கங்கை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மனுவில், “நூலகத்தில் பத்தாயிரம் புத்தகங்கள் உள்ளன. நூலகம் குடோன் போன்று உள்ளது. மக்கள் வந்து படிக்கும் இடமாக நூலகம் இல்லை. எனவே இந்த நூலகத்தை அரசு உயர்நிலைப் பள்ளி அருகே மாற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
தேனி, ஜன.9- பெரியகுளம் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் என்எஸ்என் ரத்தின வேலு தலைமை வகித்தார். செயலாளர் சிதம்பர சூரிய வேலு முன்னிலை வகித்தார். பெரியகுளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
விவசாயிகளுக்கு வேளாண் மாணவர்கள் ஆலோசனை
சின்னாளபட்டி, ஜன.9- திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் வட்டா ரத்தில், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதி ஆண்டு மாணவர்கள் விவசாயி களுக்குத் தொழில்நுட்ப செயல் விளக்கம் மற்றும் ஆலோ சனைகள் வழங்கினர். பலக்கனூத்து கிராமத்தில் பீட்ரூட்டைத் தாக்கும் பூச்சிகளைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் சூரிய மின் விளக்குப் பொறி, பாகற்காயில் பழப்பூச்சியைக் கட்டுப் படுத்தும் பொறி, வெள்ளை ஈக்களைக் கண்காணிக்கும் மஞ்சள் ஒட்டுப் பொறி மற்றும் முருங்கையில் காய் ஈக்களைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் இனக் கவர்ச்சிப் பொறி ஆகியவற்றின் செயல் விளக்கம், அவை இயங்கும் முறை ஆகியவற்றை மெய்யரசன், .மோகன் ராஜ், நாராயணன், . நிதிஷ்குமார், பன்னீர் செல்வம், பிர காஷ், பிரவீன்குமார், ரஹோஜி ஹூருஷிக், ராமானு ஜம் ஆகிய மாணவர்கள் விவசாயிகளுக்கு எடுத்து ரைத்தனர்.
தகராறில் ஈடுபட்டவர்கள் கைது
தேனி, ஜன.9- தேனி மாவட்டம் போடி கீழத்தெருவைச் சேர்ந்தவர் தமி ழரசி (55). இவர் போடி சாலை காளியம்மன் கோவில் அருகே தேநீர் கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தகராறு செய்து தீ வைத்த தாகப் போடி போஸ்பஜார் தெருவைச் சேர்ந்த லோகேஸ்குமார் (23) என்பவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வந்த லோகேஸ் குமார், அவரது நண்பர் போடி வருவாய் ஆய்வாளர் தெரு வைச் சேர்ந்த ஹிகேந்திரா (18) இருவரும் மீண்டும் தேநீர் கடைக்குச் சென்று வழக்குக்காகச் செலவு செய்த ரூ.25 ஆயிரத்தைக் கொடுக்குமாறு தகராறு செய்து, கடை யிலிருந்த பணத்தை எடுக்க முயன்றுள்ளனர். இதுகுறித்துத் தமிழரசி கொடுத்த புகாரின் பேரில் போடி நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து லோகேஸ்குமார், ஹிகேந்திரா ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மின் கம்பத்தில் மோதி பலி
தேனி, ஜன.9- தேனி மாவட்டம் போடி புதூர் வலசைத் துறை சாலை யைச் சேர்ந்தவர் கணேசன் (30). இவர் போடி குரங்கணி மலைக் கிராமத்தில் தோட்டம் குத்தகைக்கு எடுத்து விவ சாயம் செய்து வந்தார். சில தினங்களுக்கு முன் தோட்டத் தில் தண்ணீர் பாய்ச்சி விட்டு போடிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். போடி முந்தல் சாலையில் வரும்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை யோர மின் கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்து மதுரையில் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசன் திங்கள்கிழமை உயிரிழந்தார். போடி நகர் காவல்துறையினர் விசாரிக் கின்றனர்.
சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை மையம் திறப்பு
ஆணைக்குழு-தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு உத்தரவின் அடிப்ப டையில் திங்களன்று திருவில்லிபுத்தூர் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு அலுவலகத்தில் பொதுமக்கள் சட்ட உதவி பெறும் வகையில் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பை “ சென்னை உயர்நீதிமன்ற (பொறுப்பு) தலைமை நீதிபதி காணொளி மூலமாகத் தொடங்கி வைத்தார். நிகழ்வில் விருதுநகர் மாவட்ட சட்டப் பணி ஆணைக்குழு தலைவர், நீதிபதிகள், வழக்க றிஞர்கள், சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசக அமைப் புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் . மாவட்ட முதன்மை நீதிபதி எம். கிறிஸ்டோபர் சட்ட உதவி மையத்தைத் திறந்து வைத்தார்.
10,402 காலிப்பணியிடங்களை மூன்று மாதத்தில் நிரப்ப அறிவுறுத்தல்
மதுரை, ஜன.9- தமிழ்நாடு அரசுத்துறைகளில் பட்டி யல் வகுப்பினருக்கான 10,402 காலிப் பணியிடங்களை மூன்று மாதங்களில் நிரப்ப வேண்டும் எனப் பட்டியல் வகுப்பி னருக்கான தேசிய ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹல்தார் அறிவுறுத்தி யுள்ளார். இது தொடர்பாகத் திங்களன்று அருண் ஹல்தார் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: ஆயத்தீர்வைத் துறை, உள்துறை ஆகியவற்றில் அதிகபட்சமாக 6,841 பணி யிடங்கள் காலியாக உள்ளன. எரிசக்தித் துறையில் 228 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்பு வதற்கான பணிகளை விரைந்து மேற் கொள்வதாக மாநில அரசின் ஆதிதிரா விடர் நலத்துறை கூடுதல் தலைமைச் செய லாளர் டி.எஸ். ஜவஹர் உறுதி அளித்தி ருப்பதாகவும் அருண் ஹல்தார் தெரி வித்தார். திங்களன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பட்டியல் வகுப்பினருக்கு எதி ரான 13 சம்பவங்கள் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் பத்துச் சம்பவங்களுக்குச் சுமூகதீர்வு காணப்பட் டது. மூன்று சம்பவங்கள் தொடர் விசா ரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார். மேலும் அவர் கூறுகையில், புதுக் கோட்டை மாவட்டம் வேங்கைவாசல் சம்ப வம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் ஆகி யோருக்கு உத்தரவிட்டு பட்டியல் வகுப்பி னருக்கான தேசிய ஆணையம் தாமாக முன்வந்து நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக அவர் கூறினார். கூட்டத்தில் பட்டியல் வகுப்பினருக் கான தேசிய ஆணையத்தின் இயக்குநர் டாக்டர் சுனில்குமார் பாபு உள்ளிட்ட அதி காரிகள் கலந்துகொண்டனர்.
வரம்பு மீறிய ஆளுநர்: நவாஸ் கனி எம்.பி. கண்டனம்
மதுரை, ஜன.9- அரசமைப்புச் சட்டத்தையும், சட்டமன்ற மரபையும் மீறிய தகுதிக்குப் பொருந்தாத ஆளுநரை ஒன்றிய அரசு தாமதமின்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என இராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நிறைந்தி ருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசி னால் தயாரிக்கப்பட்ட உரையை எந்தவித மாறுதல் மற்றும் திருத்தங்கள் இன்றி அப்படியே வாசிப்பது தான் ஆளு நர் உரையின் மரபு. ஆளுநர் உரையில் அத்தகைய மரபை மீறி தகுதிக்குப் பொருந்தாமல் தன்னுடைய செயல் பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆளுநர் ரவி. வரம்பு மீறிச் செயல்படும் அவரது இத்தகைய செயல் கடுமை யான கண்டனத்துக்குரியது. தகுதிக்குப் பொருந்தாத ஆளுநர் ரவியை எந்தவித தாமதமும் இன்றி ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
காரணமின்றி குடிநீர் இணைப்புத் துண்டிப்பு நகராட்சிக்கு ரூ.8 ஆயிரம் அபராதம்
திருவில்லிபுத்தூர், ஜன.9- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம்-சங்கரன் கோவில் சாலையில் பசும்பொன் முத்துராமலிங்கம் என்ப வர் இரண்டு வீடுகள் கட்டி இரண்டு வீடுகளுக்கும் இராஜ பாளையம் நகராட்சியில் குடிநீர் இணைப்புப் பெற்றுள் ளார். நகராட்சி குடிநீர் வரியைப் பெற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் 2017- ஆம் ஆண்டு ஜூன் மாதம் பசும்பொன் முத்துராமலிங்கம் வீட்டில் மின் மோட்டாரைப் பயன்படுத்தித் தண்ணீர் எடுப்பதாகக் கூறி குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து பசும் பொன் முத்துராமலிங்கம் விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மின்மோட்டார் வைத்து குடிநீர் பெற்றதைத் தகுந்த ஆவணங்களுடன் நகராட்சி நிரூபிக்கவில்லை. மனுதாரர் குடிநீர் பெறுவதற்கு முறை யான கட்டணங்கள் செலுத்தியுள்ள நிலையில் மீண்டும் குடிநீர் இணைப்புப் பெறுவதற்கு அடிப்படை முகாந்திரம் உள்ளது. அவருடைய இரண்டு வீடுகளுக்கும் மீண்டும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். மனுதாரருக்கு நகராட்சி இழப்பீடாக ரூ.8,000 ஒரு மாத காலத்திற்குள் வழங்கவேண்டுமெனத் தீர்ப்பளித்தனர்.
வேங்கைவயல் சம்பவத்தில் வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை: காவல்துறை
புதுக்கோட்டை, ஜன.9- புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவை கலந்த சம்பவத்தில் வெளிப்படைத் தன்மையுடன் விசாரணை நடைபெற்று வருவதாக திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் க.கார்த்தி கேயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறப்புக் குழுவினருடன் திங்களன்று நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு அவர் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின குடியிருப்புக்கு தண்ணீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவை மர்ம நபர்கள் கலந்துள்ளனர். இச்சம்பவத்தில் கூடுதல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில், இரு துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 4 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வா ளர்களைக் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள் ளது. இக்குழு மூலம் 70 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப் பட்டுள்ளது. வெளிப்படைத் தன்மையுடன் ஒளிவுமறை வின்றி விசாரணை நடத்தப்படும். இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்து காவல்துறையிடம் தெரிவிக்க விரும்புவோர் 94899-46674 என்ற எண்ணில் தெரிவிக்க லாம் என தெரிவித்தார். கூட்டத்தில், திருச்சி சரக துணைத்தலைவர் சரவ ணன் சுந்தர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
மக்காச்சோளத்திற்கு காப்பீடு கேட்ட விவசாயி மயக்கம்
திருநெல்வேலி, ஜன. 9- நெல்லை மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடந்தது. மானூர் லட்சுமியாபுரத்தை சேர்ந்த விவசாயி இளையராஜா என்பவர் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எங்கள் பகுதியில் ஒரு ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளேன். தற்போது நன்றாக விளைந்து அறு வடைக்கு தயாராக இருந்த நிலையில் காட்டுப்பன்றிகள் புகுந்து அதை நாசம் செய்துள்ளது. இதற்கு காப்பீட்டுத் தொகை கேட்ட போது மக்காசேளம் பயிருக்கு காப்பீடு கிடையாது என தெரிவித்தனர். எனவே வாழ்வாதாரம் கருதி நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கூறப் பட்டிருந்தது. பின்னர் அவர் மனு கொடுத்து விட்டு, வெளியே வந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தண்ணீர் தெளித்து முதலுதவி அளித்தனர்.
மானாமதுரை நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுமா?
மதுரை, ஜன.9- மானாமதுரை வைகை ஆற்றிலிருந்து 16 கிராமங்கள் பயனடையும் வகையில் நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறந்து விடக் கோரி சிவகங்கை மாவட்டம், மானாமதுரை யைச் சேர்ந்த காந்தி, மேலப்பசலை, உக்கிர பாண்டியன் ஆகியோர் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதில், “வைகை ஆற்று நீரைக் கொண்டே சிவகங்கை மாவட்டம், ராஜ கம்பீரம், மேல்குடி உள்ளிட்ட 16 பெரிய கண்மாய்கள், 10 சிறிய கண்மாய்கள் மற்றும் 25 குளங்கள் மூலம் விவசாயப் பணிகள் நடக்கும் வகையில் நாட்டார் கால்வாய் அமைந்துள்ளது. இதன் மூலம் சுமார் பத்தாயிரம் ஏக்கர் பாசன விவசாயம் நடைபெறுகிறது. அதிக பட்ச அளவு தண்ணீர் உள்ளதால் வைகை யில் இராமநாதபுரம் மாவட்டத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டுப் பல்வேறு கண் மாய்களும் நிரம்பியுள்ளன. இதனால், கால்வாய்கள் அடைக்கப்பட்டு வைகை நீர் கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சுற்று வட்டார கிராமங்களில் விவசாயப்பணிகள் தொடங்கப்பட்டுள் ளது. ஒருமாதத்தில் அறுவடை செய்யும் நிலை உள்ளது. நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறந்தால் மட்டுமே பயிர்களைக் காப்பாற்ற முடியும். வைகை அணையிலிருந்து உபரி நீர் கடந்த நான்கு நாட்களாகத் திறக்கப் பட்டுள்ளது. ஆனால், நாட்டார் கால் வாய்க்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை.
இதனால், எங்கள் பகுதி பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி, மானா மதுரை வைகை ஆற்றிலிருந்து 16 கிரா மங்கள் பயனடையும் வகையில் நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறந்து விட உத்தர விட வேண்டும்.” எனக் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், வைகை அணையில் 52 அடி நீர் மட்டுமே உள்ளது. இராமநாத புரம் பாரம்பரிய ஆயக்கட்டு விவசாயி களுக்குத் தண்ணீர் வழங்கப்பட உள்ளது. மனுதாரர் குறிப்பிடும் பகுதிக்குத் தண்ணீர் வழங்குவதற்குப் போதிய நீர் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது இதையடுத்து நீதிபதிகள், வைகை அணையின் மொத்தக் கொள்ளளவு எவ்வ ளவு? பாரம்பரிய ஆயக்கட்டு விவசாயி களுக்கு எவ்வளவு தண்ணீர் அனுப்பப்படு கிறது. ஆயக்கட்டு விவசாயிகளுக்குத் தண்ணீர் திறந்து விட்டது போக மீதம் உள்ள தண்ணீரின் அளவு மற்றும் எவ்வளவு தண்ணீர் கடலில் கலக்கிறது. அணையில் மீதம் தண்ணீர் இருக்கும் பட்சத்தில் மனுதாரர் குறிப்பிடும் பகுதி களுக்கு வழங்குவதற்கான சாத்திய கூறு கள் உள்ளதா என்பது குறித்துச் சம்பந்தப் பட்ட துறைச் செயலாளரிடம் ஆலோசனை மேற்கொண்டு தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசா ரணையை ஜன.19-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறை: கண்ணியத்துடன் செய்தி வெளியிட வலியுறுத்தல்
புதுதில்லி, ஜன.9- விபத்துகள், இறப்புகள், பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்டவை குறித்து செய்தி வெளியிடும்போது கண்ணியத்து டன் வெளியிட வேண்டுமென அனைத்து தொலைக்காட்சிகளையும் ஒன்றிய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தி யுள்ளது. தனிநபர்களின் இறந்த உடல்கள் மற்றும் காயமடைந்த நபர்களின் படங்கள் /வீடியோக்கள், சுற்றிலும் ரத்தம் சிதறிக் கிடப்பது, பெண்கள், குழந்தைகள், முதிய வர்கள் இரக்கமின்றி அடிக்கப்படுவது, ஆசி ரியரால் அடிக்கப்படும் குழந்தைகள் தொடர்ச்சியாக அழுவது போன்றவற்றை தொலைக்காட்சிகள் மங்கலாகக் காட்டா மலும், முன்னெச்சரிக்கை வாசகங்கள் இல் லாமலும், வட்டமிட்டு பல நிமிடங்களுக்கு மீண்டும் மீண்டும் காட்டுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற சம்ப வங்களைப் செய்திப்படுத்தும் விதம் பார்வையாளர்களுக்கு வெறுக்கத்தக்க தாகவும் வேதனையளிப்பதாகவும் உள் ளதை அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது. வயதானவர்கள், நடுத்தர வயதுடை யவர்கள், சிறு குழந்தைகள், மற்றும் பல் வேறு சமூக-பொருளாதாரப் பின்னணி களைக் கொண்ட குடும்பங்களைக் கொண் டவர்கள் பொதுவாகப் பார்க்கும் தளமாக தொலைக்காட்சி உள்ளதால், நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களை ஒளிபரப்புவதில் ஒளிபரப்பாளர்களிடையே பொறுப்பு ணர்ச்சியும், கட்டுப்பாடும் வேண்டுமென அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக நாடு முழுவதும் நடைபெற்ற 12 சம்பவங்களை சுட்டிக்காட்டி யுள்ள ஒன்றிய அரசு, “2022-ஆம் ஆண்டு மே 4-ஆம் விருதுநகர் மாவட்டம் இராஜ பாளையத்தில் ஒரு நபர் தனது சொந்த சகோ தரியை வெட்டிக் கொன்றதைக் ஊடகங்கள் காட்டியதை” குறிப்பிட்டுள்ளது.