மதுரை, ஜூன் 13- மதுரை மாவட்டம் எம். கல்லூப்பட்டி அருகில் உள்ள துள்ளுக்குட்டி நாயக்கனூரைச் சேர்ந்த கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கிருஷ்ணன். இவரது மகன் மணி கண்டன். மணிகண்டனை கடந்த ஐந்தாம் தேதி அதே ஊரைச் சேர்ந்த அருள்பாண்டி அவரது தந்தை முருகன் ஆகியோர் வெட்டியுள்ளனர். இதில் மணிகண்டனின் இடது கை மணிக்கட்டு துண்டானது, தோள்பட்டை, தலை ஆகிய இடது கையில் வெட்டு காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத் தான நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனை யில் சிகிச்சைப் பெற்று வருகிறார் . இந்த நிலையில் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் எம். கல்லுப்பட்டி வனத் துறையினர் கொலைவெறி சம்பவத்திற்கு காரண மான அருள் பாண்டி மற்றும் அவரது தந்தை முருகன் ஆகியோரை கைது செய்யவில்லை. என் மகன் உயிருக்கு போராடி வரும் நிலையில் ஆட்சியர் குற்றவாளிகளை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். எங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று தர்ணாவில் ஈடுபட்டனர்.