districts

img

மார்த்தாண்டத்தில் தமுஎகச மாநில மாநாடு: வரவேற்புக்குழு அலுவலகம் திறப்பு

குழித்துறை, மே 23-  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் 15ஆவது மாநில மாநாடு குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் வருகிற  ஆகஸ்ட் 12, 13, 14, 15 தேதி களில் நடைபெறவுள்ளது. அதனையொட்டி மாநாடு வரவேற்புக் குழு அலுவல கம் திறப்பு விழா மே 21  சனிக்கிழமை மாலை மார்த் தாண்டத்தில் நடைபெற்றது. குழித்துறை நகர்மன்ற முன்னாள் தலைவர் டெல் பின் தலைமை வகித்தார். தக்கலை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கணேசன் வரவேற்புக்குழு அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவோம், சாதி உணர்வுகளை மறுப்  போம் மறப்போம், தமிழர்  களின் வரலாறும் பெருமை யும், பஞ்சபூதங்களின் அடிப்  படையில் நம் உடல் நலம்  ஆகிய நூல்களை எழுதி யுள்ளதாக தெரிவித்தார். சாதி, மத பேதமற்ற சமுதா யம் அமைய அனைவரும் உழைக்க வேண்டும் எனவும் அதற்காகத்தான் இளைய தலைமுறையான பள்ளி, கல்லூரி மாணவர்களை சந்  தித்து பேசி உரையாடுவதாக வும் குறிப்பிட்டார். மேலும், இளைஞர்கள் போதையின் பிடியில் சிக்காமல் இருக்கச் செய்ய வேண்டியது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரு வதாகவும் தெரிவித்தார். ஐஎஸ்ஆர்ஓ முன்ளாள் அதிகாரி மோகன், மார்த் தாண்டம் தொழில் வர்த்தகச் சங்கத் தலைவர் அல் அமீன், சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் தக்கலை ஹலீமா, தமுஎகச மாவட்டச் செயலாளர் ஹசன் உள்ளிட்டோர் பேசி னர். மாவட்டத் தலைவர்  ஜெயகாந்தன், வரவேற்புக் குழு பொருளாளர் முரளீ தரன், கின்னஸ் சாதனை ஓவி யர் இராஜசேகரன், மாவட்டச்  செயற்குழு உறுப்பினர் சுஜித் மற்றும் மாவட்டக்குழு, வரவேற்புக்குழு, கிளை  நிர்வாகிகள் உட்பட ஏரா ளமானோர் பங்கேற்றனர்.