சின்னாளப்பட்டி, மே 16- திண்டுக்கல் மாவட்டம் வத்த லக்குண்டுவில் கவிஞர் வெண்மணி நினைவரங்கத்தில் ஞாயிறன்று தமுஎகச-வின் 12 ஆவது கிளை மாநாடு நடைபெற்றது. இதற்கு துணைத் தலைவர் வசந்த முகில் தலைமை தாங்கி னார். சே.அசரப், விஜயவேல், சக்தி வேல் ஆகியோர் முன்னிலை வகித் தனர். கிளைச் செயலாளர் லட்சும ணன் வரவேற்றார். மாவட்டத் தலை வர் கவிஞர் கவி வாணன், மாவட்டச் செயலாளர் சசி, பட்டிமன்ற நடுவர் முல்லை நடவரசு, வத்தலக்குண்டு பேரூராட்சித் தலைவர் சிதம்பரம் ஆகியோர் பேசினர். மாநாட்டில், தலைவராக வசந்த முகில், செயலாளராக லெட்சும ணன், பொருளாளராக அசரப் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். வத்த லக்குண்டுவில் சுப்ரமணிய சிவா வுக்கு மணிமண்டபம் கட்டக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.