districts

img

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, காளையார்கோவில் கிளை நூலகம் இணைந்து  உலக புத்தக தின விழாவைக் கொண்டாடின. காளையார்கோவில் கிளை நூலகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலாளர்  ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். நிகழ்வில் பங்கேற்றவர்கள் காளையார்கோவில் கிளை நூலகத்திற்கு  அதிகமான புரவலர்களைச் சேர்ப்பதென உறுதியேற்றனர்.