districts

img

தமிழ்நாடு அமைப்பு தின பிரச்சாரம் -உறுதியேற்பு

விருதுநகர், நவ.1- நவம்பர் 1 தமிழ்நாடு அமைப்பு தினத்தையொட்டி  விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்  பில் அமைப்பு தினத்தை விளக்கி யும் தமிழ்நாடு என பெயர் சூட்டக்  கோரி  67 நாட்கள். உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த விருதுநகர் தியாகி சங்கரலிங்கனார் மணி மண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு, தமிழ்நாட்டை பாது காப்போம், தமிழ்மொழி, கலச்சா ரம், பாரம்பரியத்தை பாதுகாப் போம், கட்டாய இந்தி திணிப்பை அனுமதியோம் என  உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகர் செயலா ளர் எல்.முருகன். தலைமையேற் றார். வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்துவேலு முன்னிலை வகித்தார். துவக்கி வைத்து மூத்த தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் பேசினார்.  மாவட்ட செயலாளர்  கே.ஆர்ஜூனன் சிறப்புரை யாற்றினார். உறுதிமொழியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்துக்குமார் முன்மொழிந்தார். மேலும் இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.வேலுச்சாமி, ஏ.குருசாமி,  வி.முருகன், எம்.சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.