சட்டமன்ற மரபுகளை மீறிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை ஒன்றிய அரசாங்கம் உடனடியாக திரும்பப் பெறக்கோரி இராமேஸ்வரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா செயலாளர் ஜி.சிவா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் க. கருணாகரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் இ.ஜஸ்டின்,ஏ.ஆரோக்கிய நிர்மலா ஆகியோர் பேசினர். தாலுகாக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.