மதுரை, ஜன.24- தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழி யர் சங்கம் சார்பில் சிவகங்கை மண்டலம் இளையான்குடி வட்டார அலுவலராக பணி யாற்றிவரும் சங்கத்தின் மாநில செயலாளர் ட்டி.வினோத் ராஜாவை எவ்வித முகாந்திர முமின்றி பணிமாறுதல் செய்த சிவகங்கை மண்டல இணைப்பதிவாளரின் ஊழியர் விரோத, தொழிற்சங்க விரோத போக்கை கண்டித்து திங்களன்று மதுரை பழங்கா நத்தம் அருகில் உள்ள தமிழ்நாடு அரசு கூட்டு றவுத்துறை மதுரை மண்டல இணைப்பதி வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கூடுதல் பதிவாளரிடம் (நிதி மற்றும் வங்கி) நடைபெற்ற பேச்சு வார்த்தையின் அடிப்படையில், வினோத் ராஜா கூட்டுறவு சார்பதிவாளர், இளை யான்குடி கள அலுவலர் பணிமாறுதல் ஆணை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப் பட்டது. இதுதொடர்பான வாயிற்கூட்டம் மதுரை மண்டல இணைப்பதிவாளர் அலு வலகம் முன்பு மாவட்டத் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சீனியப்பா, தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் சந்திரபோஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட பொருளாளர் மணிகன்டன் நன்றி கூறினார்.