districts

img

மாதர் சங்கத்தினர் மீதான பொய்வழக்கை திரும்பப்பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

மதுரை, ஏப்.6- அரசின் இலவச மகளிர் பேருந்  தில் பயணித்த பெண் பயணிகளை யும் இழிவுபடுத்திய ஓட்டுநர், நடத்து நர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களையும்   தமிழக அரசின் திட்டத்தையும் இழி வாக பேசியதை  தட்டிக்கேட்ட ஜன நாயக மாதர் சங்க  மாநிலச் செய லாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் மற்றும் சி. இந்திரா மீது போடப்  பட்ட பொய்வழக்கை திரும்பப் பெற வேண்டும். பொய் வழக்கு பதிவு செய்த சமயநல்லூர் காவல் துறை சார்பு ஆய்வாளர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஏப்ரல் 6 வியா ழனன்று மதுரை மாவட்ட ஆட்சி யரகம் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரை மாநகர் - புறநகர் மாவட்டக்குழுக்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு புறநகர் மாவட்டச் செய லாளர் க.பிரேமலதா தலைமை  வகித்தார். மாநகர் மாவட்டச் செய லாளர் வை.ஜென்னியம்மாள் முன்  னிலை வகித்தார்.  மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலபாரதி, மாநில துணைத் தலை வர் ஆர். மல்லிகா,  மகளிர் சட்ட  உதவி மன்ற  தலைவர் வழக்கறிஞர் உ.நிர்மலாராணி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  கே. பாலபாரதி பேசுகையில், நகரப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ள லாம் என்று தமிழக அரசு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஆனால் பல மாவட் டங்களில் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் பெண்களை அர சுப்பேருந்துகளின் நடத்துநர்கள், ஓட்டுநர்கள் தரக்குறைவாக பேசி  வருகின்றனர். பெண்கள் பயணச்  சீட்டு மூலம் ஓட்டுநர், நடத்துநருக்கு கிடைக்கும் ஊக்கத்தொகை கிடைக்காததால் பெண்களை தரக்  குறைவாக நடத்துவதாகக் கூறப்  படுகிறது. அப்படியெனில் அவர் கள் அரசிடம் தான் கோரிக்கை  வைக்க வேண்டும். மதுரையில் பெண்களை தரக்குறைவாக பேசிய  நடத்துநர் மற்றும் ஓட்டுநரை மாதர்   சங்க மாநிலச்செயலர் பொன்னுத் தாய் தட்டிக் கேட்டு, புகாரும் அளித்  துள்ளார். ஆனால் காவல்துறை யினர், பேருந்து நடத்துநர் அளித்த புகாரின்பேரில் பொன்னுத்தாய் மீது பொய் வழக்குப்பதிவு செய் துள்ளனர். தரக்குறைவாகப் பேசிய நடத்துநர் மற்றும் ஓட்டுநர் இருவரையும் பணியிடை நீக்கம்  செய்ய வேண்டும். வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அரசுப்பேருந்து களில் பெண்கள் தரக்குறைவாக நடத்தப்படுவதை தடுக்க அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  இதில் மாநகர் மாவட்டத் தலை வர் ஆர். லதா, புறநகர் மாவட்ட தலைவர் சி. மலர்விழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் . ஆர்ப்  பாட்டத்தின் நிறைவாக மதுரை மாவட்ட ஆட்சியர், அரசு போக்கு வரத்து மதுரை மண்டல பொது மேலாளர், மதுரை மாவட்ட காவல்  துறை கண்காணிப்பாளர் ஆகி யோரிடம் ஜனநாயக மாதர் சங்கத்  தின் புகார் மனு மீதான நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப் பட்டது.