districts

img

காவல்துறை, அரசு மருத்துவரை கண்டித்து க.விலக்கில் மாணவர்-வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தேனி, ஜன.3- இந்திய மாணவர் சங்க முன் னாள் மாவட்ட தலைவர் பிரேம் குமாரை தாக்கிய காவல்துறை யினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காயமடைந்தவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்காமல் விரட்டிய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர் துரை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் சார்பில் க.விலக்கில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வீரபாண்டி காவல்நிலையத் தில் மாணவர் சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாணவர் சங்க மாவட்டத் தலைவர் டி.நாகராஜ் தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சி.முனீஸ்வரன் உரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் மாணவர் சங்க மாவட்ட செயலாளர் வேல் பிரகாஷ், துணைச்செயலாளர் வினோத்ராஜ், சண்முகசுந்தரம், குரு தயாநிதி, சேகுவேரா, வாலி பர் சங்க மாவட்ட துணைச்செய லாளர் சவுந்திரபாண்டியன், கரண் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.