இராமநாதபுரம், டிச.25- ஒன்றிய மோடி அரசின் தொழி லாளர் விரோதக் கொள்கைக ளைக் கண்டித்து 2022 பிப்ரவரி 23 ,24 ஆகிய நாட்களில் தேசம் தழுவிய வேலை நிறுத்தப் போராட் டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இப்போராட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்காக இராமநாதபுரத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற்றது. ஏஐடியுசி மாவட்ட தலைவர் எஸ்.பி.இராதா, சிஐடியு மாவட்ட தலைவர் எம்.அய்யாதுரை, எல்பிஎப் மாவட்ட தலைவர் காஞ்சி, எச்எம்எஸ் மாவட்டத் தலைவர் சண்முகவேல் ஆகி யோர் தலைமை வகித்தனர். சிஐ டியு மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி ,எல்பிஎப் மாவட்டச் செய லாளர் எஸ். வின்சென்ட் அமல தாஸ், ஏஐடியுசி மாவட்டச் செய லாளர் என்.கே.ராஜன் , ஏஐஐ இஏ கிளைச் செயலாளர் டி.முத் துப்பாண்டி, டிஎன்பிடிஎப் மாவட்டச் செயலாளர் மு.முனிய சாமி, எச்எம்எஸ் மாவட்டச்செய லாளர் எஸ். குமரகுருபரன், ஆகி யோர் வேலைநிறுத்தத்தின் நோக் கங்களை விளக்கி பேசினர்.