இராமேசுவரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
இராமேஸ்வரம், ஜூலை 9- இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இருந்து சனிக்கிழமையன்று 461 விசைப்படகளில் 3 ஆயிரத்துக் கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற னர். இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, பெனிட்டோ லியோன் மற்றும் பாலா ஆகி யோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை சிறை பிடித்தனர். படகில் இருந்த கிறிஸ்து, ஆரோக்கியராஜ், கெர்மாஸ், ஆரோக்கியம், ரமேஷ், ஜெகன், பிரபு, மெல் டன், பிரியன், ஈசாக். ஜான். பிரதீபன், அந்தோணி, சார்ஜ், ஜனகர் ஆகிய 15 மீனவர்களை கைது செய்து, காங்கேசம் துறைமுகம் அருகே உள்ள மயில்வெட்டி துறைமுகத் திற்கு கொண்டு சென்றனர் இதனைதொடர்ந்து, இரண்டு படகுகள் மற்றும் மீன்கள்,ஜி.பி.எஸ். உள்ளிட்ட கருவிகளை பறிமுதல் செய்தனர். 15 மீனவர்களை ஊர்க்காவல்துறை நீரியல் துறையிடம் ஒப்படைத்தனர். மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து விடுமுறை நாள் என்பதால் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்த னர்.
விபத்தில் ராணுவ வீரர் காயம்: ஓராண்டுக்கு பின் வழக்கு பதிவு
தேனி, ஜூலை 9- ராணுவ வீரர் இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந் தது குறித்து போலீஸார் ஓராண்டுக்கு பின் ஞாயிற்றுக் கிழமை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போடி அருகே தருமத்துப்பட்டி கம்பர் தெருவை சேர்ந்த வர் செல்வன் மகன் ராஜா (31). இவர் இந்திய ராணுவத்தில் வேலை செய்து வருகிறார். கடந்தாண்டு ஜூன் மாதம் விடு முறைக்கு ஊருக்கு வந்தவர் போடி பிள்ளையார் கோவில் தடுப்பணையில் குளிக்க இரு சக்கர வாகனத்தில் சென்றுள் ளார். போடி முந்தல் சாலையில் செல்லும்போது இரு சக்கர வாகனத்திலிருந்து விழுந்து பலத்த கயமடைந்தார். போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டும் பணிக்கு திரும்பினார். அந்த நேரத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்ட தால் போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை. இந்த நிலையில் ராணுவத்தில் பணிபுரிந்தபோது மீண்டும் அவருக்கு முதுகெலும்பில் வலி ஏற்பட்டதால் புனே ராணுவ மருத்துவமுகாமில் ஓராண்டாக உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலை யில் ராஜாவின் தந்தை செல்வன் (57) தனது மகன் ராஜா வுக்கு ஏற்பட்ட விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து நட வடிக்கை எடுக்கக்கோரி போடி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இன்றைய நிகழ்ச்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காளை யார்கோவிலில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம்: திங்கள் கிழமை மாலை 5 மணி. பங்கேற்பு: மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு .வெங்கடேசன், மாநிலக்குழு உறுப்பி னர்கள் ஸ்ரீதர், எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டச் செயலா ளர் தண்டியப்பன், ஒன்றியச் செயலாளர் தென்னரசு.
மாட்டுத்தாவணியிலிருந்து மானாமதுரைக்கு தனி பேருந்து இயக்க சிபிஎம் கோரிக்கை
சிவகங்கை, ஜூலை 9- மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு தனியாக பேருந்து இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆண்டி, மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளார். அவர் அளித்த மனுவில், மதுரை யிலிருந்து மானாமதுரைக்கு தனி யாக பேருந்து இயக்க வேண்டும். மானாமதுரைக்கென மதுரையிலி ருந்து பேருந்தில் பயணிகளை ஏற்ற மறுக்கிறார்கள். மானாமதுரையில் அண்ணா சிலை பைபாஸ் சாலையில் இரவு நேரம் இறங்கி வரும் பயணி களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள் ளது. பைபாஸ் சாலையில் இறங்கி கீழ்கரை கன்னார் தெரு செல்கிற மக்க ளின் வசதிக்காக அண்ணாசிலை பை பாஸ் நிறுத்தத்திலிருந்து மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும். மதுரை யிலிருந்து மானாமதுரைக்கு அனைத்து பேருந்துகளிலும் பயணி களை ஏற்றிச்செல்ல மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
தேனி, ஜூலை 9- தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து, 30.06.2023 அன்றைய தேதிப்படி குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போருக்கு அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது. தற்போது இத் திட்டத்தின்படி காலாண்டு ஒன்றுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தோல்வி கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.600ம், எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு ரூ.900ம், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பதிவு செய்த வர்களுக்கு ரூ.1200ம், பட்டம் மற்றும் முது கலைப் பட்டம் படித்து பதிவு செய்தவர்களுக்கு ரூ.1800ம், 3 வருடங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் பதிவு செய்து, குறைந்த பட்சம் ஒரு வருடம் நிறைவு செய்திருந்தாலே போதுமானது. இவ்வாறான மனுதாரர்களின் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி மற்றும் அதற்கு கீழான தகுதி வரை பதிவு செய்தவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.600ம், மேல்நிலைக் கல்வித் தகு தியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.750-ம், பட்ட தாரிகள் எனில் ரூ.1000-ம், 10 வருடங்களுக்கு வழங்கப்படுகிறது. 30.06.2023 அன்று நில வரப்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்கு மிகாமலும், ஏனையோரைப் பொறுத்த மட்டில் 40 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளி மனு தாரர் எனில் குடும்ப ஆண்டு வருமானத்திற்கு உச்ச வரம்பு கிடையாது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.
மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.1.28 கோடி இழப்பீடு வழங்கல்
சிவகங்கை, ஜூலை 9- சிவகங்கை மாவட்டத்தில் மக்கள் நீதிமன் றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் விசா ரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி ,குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், சார்பு நீதிபதி சுந்தரராஜ், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி பரமேஸ்வரி ஆகியோர் வழக்கு களை விசாரித்தனர் .இந்த சிறப்பு மக்கள் நீதி மன்றங்களில் எட்டு வழக்குகள் சமரசமாக தீர்க்கப் பட்டு 38 லட்சத்து 75 ஆயிரம் வரையில் வழக்காடி களுக்கு கிடைத்தது .அதே போல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.89 லட்சத்து 90 ஆயிரத்து 300 வரையில் வங்கி களுக்கு பணம் வரவாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு பணியாளர்கள் செய்திருந்தனர்.
அரசு மருத்துவமனைகளில் நீதிபதி திடீர் ஆய்வு
சிவகங்கை, ஜூலை 9- சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பாலியல் கொடுமை களால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிகளுக்காக தனி அறை உள்ளதா என்று போக்சோ நீதி மன்ற மாவட்ட அமர்வு முதன்மை நீதிபதி சரத்ராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி நீதிபதி சரத்ராஜ் இந்த ஆய்வை மேற்கொண்டார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் அரசு மருத்துவமனைகளில் தனி மையில் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர். பரி சோதிப்பதற்கு அரசு மருத்துவமனைகளில் தனி அறை இருக்கிறதா என்பதை நீதிபதி ஆய்வு செய்தார். தனி அறை இல்லாத மருத்துவமனை களில் தனி அறை ஏற்படுத்த நீதிபதி சரத்ராஜ் உத்தரவிட்டார்.
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைவு: பெரியாறு அணையில் நீர்வரத்து சரிவு
தேனி, ஜூலை 9- முல்லைப்பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. கடந்த வாரம் பெய்த கன மழையி னால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. சனிக்கிழமை 2349 கன அடி நீர் வந் தது. தற்போது மழைப்பொழிவு குறைந் துள்ளது. எனவே ஞாயிறன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 1505 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 119.55 அடியாக உள்ளது. 356 கன அடி நீர் திறக்கப்படு கிறது. வைகை அணையின் நீர்மட்டம் 50.10 அடியாக உள்ளது. 244 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.45 அடியாக உள்ளது. நீர்வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 80.81 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழையளவு பெரியாறு 12, தேக்கடி 8.6, சண்முகா நதி அணை 0.6, மஞ்சளாறு 9 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளன.
மனைவியை கொடுமைப்படுத்திய போலீஸ்: போடி மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு
தேனி, ஜூலை 9- போடி அருகே மனைவிக்கு குழந்தை இல்லாததால் வேறு பெண் களுடன் தொடர்பு கொண்டு மனைவி யை கொடுமைப்படுத்திய காவலர் மீது போடி மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர். தேனி மாவட்டம், போடி அருகே ராசிங்காபுரம் அழகர்சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் காமராஜ் மனைவி அழகேஸ்வரி (29). இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த கண்ணன் மகன் காம ராஜ் என்பவருக்கும் 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத் திற்கு பின் 2013 ஆம் ஆண்டு காமராஜ் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் காவலராக பணியில் சேர்ந்து வேலை செய்து வருகிறார். இதனையடுத்து காமராஜ் தனது மனைவி, பெற்றோருடன் கூட்டுக் குடும்பமாக திருப்பூரில் வசித்து வந்தார். அழகேஸ்வரிக்கு குழந்தை இல்லை. காமராஜ் வேறு பெண்களுட னும் தொடர்பில் இருந்துள்ளார். இதனை அழகேஸ்வரி தட்டிக் கேட்டுள் ளார். இதில் ஆத்திரமடைந்த காமராஜ், இவரது தந்தை கண்ணன், தாயார் லட்சுமி, சகோதரி சத்யா ஆகியோர் காம ராஜுக்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைத்துவிடுவோம் எனக் கூறி மனதளவிலும், உடலளவிலும் கொடு மைப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து அழகேஸ்வரி போடி அனைத்து மக ளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காமராஜ் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.