தூத்துக்குடி,ஆக. 23 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளி கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு துவங்க தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி அஞ்சல்துறை கோட்ட கண்காணிப்பாளர் மு. பொன்னையா கூறியதாவது: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, அஞ்சல்துறையின் கீழ் இயங்கும் இந்திய அரசுக்கு சொந்தமான வங்கியா கும். எளிமையான, குறைந்த கட்டணங்களுடன், நகரங்க ளில் மற்றும் வங்கிகள் இல்லாத கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு எளிய வங்கி சேவை அளிக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளி கள் மட்டுமில்லாமல், நூறு நாள் வேலைத் திட்டபயனா ளிகள், பிஎம் கிசான் திட்ட பயனாளிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கல்வி உதவித் தொகை, தொழிலாளர் நலவாரிய உதவித் தொகை, பெறும் பயனாளிகளும் இந்தியா போஸ்ட்பே மெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்கி பயன்பெறலாம். எனவே தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளம், ஏரல், ஓட்டப்பிடாரம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதியிலுள்ள பயனாளிகள் அனைவரும் மாவட்டத்திலுள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையை பயன்படுத்தி, தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரி மைத்தொகை பெற ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு துவங்கி பயனடையுமாறு தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.