திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சாத்தாம்பாடி கிராமத்திற்கு தெற்கு பகுதியில் மயானத்திற்கு செல்லும் ஓடைபாதையை தனிநபர் ஒருவர் வேலிபோட்டு அடைத்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் சாத்தாம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாதையினை பார்வையிட்ட அதிகாரிகள் முறையாக அளக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.