சிவகங்கை மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மானாமதுரையை அடுத்துள்ள கொம்புக்காரனேந்தல் கிராமத்தில், கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர் விடுதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். தொடர்ந்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி குத்துவிளக்கேற்றி வைத்து விடுதியைப் பார்வையிட்டனர்.