districts

img

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை

மதுரை, பிப்.25-  ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலா ளர்களுக்கு தமிழக அரசு வழங்கவேண்டிய அகவிலைப்படியை உடனடியாக வழங்கி டக் கோரி மதுரை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மண்டலங்களை சேர்ந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மதுரை அரசு போக்குவரத்து பணிமனை தலைமையகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு திண்டுக்கல் மண்டல தலைவர் டி.பி.ஆனந்தன் தலைமை வகித்தார். மண்டல நிர்வாகிகள்  மதுரை ஏ.முருகேசன், எஸ்சிடிசி என்.நாகுராஜன், விருதுநகர் பி.தங்கப்பழம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைப் பொதுச் செயலாளர் ஆர். தேவராஜ் விளக்கிப் பேசினார். இதில், சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் வீ.பிச்சை, ஜி.ராஜேந்திரன், ஏ.கனகசுந்தர், செல்லத்துரை, ராமநாதன் ஆகியோர் ஆதரித்து பேசினர். போராட்டத்தில் நூற்றுக் கணக்கான பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்க ணக்கான ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் திண்டுக்கல், விருதுநகர், மதுரை ஆகிய மண்டலங்களில் இருந்து கலந்து கொண்டனர். போராட்டத்தில், ஓய்வு பெற்ற போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு தமிழக அரசு 76 மாதமாக வழங்காமல் உள்ள அக விலைப்படியை உடனடியாக வழங்கிட வேண்டும். 2020 ஆம் ஆண்டு மே மாதம் முதல் இறந்த மற்றும் தன் விருப்பப் பணி ஓய்வு பெற்றவர்களின் பண பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.  போராட்டத்தை தொடர்ந்து அரசு போக்குவரத்து மதுரை மண்டல மேலாள ரிடம் சங்க நிர்வாகிகள் பேசினர். அப்போது கோரிக்கைகளை அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் நிறைவேற்றுவதாக உத்தரவாதம் அளிக் கப்பட்டது.  இதனைத்தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.