districts

img

வத்ராப், மம்சாபுரத்தில் முழுத் தேங்காயை கொள்முதல் செய்ய நிலையங்கள் அமைத்திடுக!

விருதுநகர், மார்ச் 25- உரித்த முழுத் தேங்காய்களை கொள்முதல் செய்திட வத்திராயிருப்பு மற்றும் மம்சாபுரம் பகுதி யில் கொள்முதல் நிலையங்களை அமைக்க  வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட விவசாயி கள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. விருதுநகரில்  விவசாயிகள் குறைதீர் கூட்டம்  மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர்  ரவிக்குமார், வேளாண் இணை இயக்குனர் உத்தண்டராமன், தோட்டக்கலை துணை இயக்கு னர் ராதாகிருஷ்ணன், நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், கூட்டுறவு இணை பதிவா ளர் செந்தில்குமார்,  கால்நடைத்துறை இணை இயக்குனர் கோயில் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு: நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயி களிடம் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 முதல் 80  வரை பெறப்படுகிறது. அங்குள்ள சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தேவையான கூலியை அரசே வழங்கிவிட்டால் இப்பிரச்சனை வர  வாய்ப்பில்லை. எனவே, அதிகாரிகள் மற்றும்  விவசாயிகள் அடங்கிய கண்காணிப்புக்குழுக் களை அனைத்து நிலையங்களிலும் ஏற்படுத்த வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.முருகன் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த வேளாண் அதிகாரி, இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.

அனைத்து கிராமங்களிலும் உழவன்- உற்பத்தியாளர் குழு 

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டு களாக உழவன் உற்பத்தியாளர் குழு அமைக்  கப்பட்டது. இந்த ஆண்டு ஏன் அமைக்கவில்லை. மேலும், அதில் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. பிற விவசாயிகளுக்கு வழங்குவதில்லை. ஏன் இந்த பாகுபாடு? மேலும் பட்டறிவு பயணத்திற்கு தொடர்ந்து ஒரே பகுதி விவசாயிகளை மட்டும் அழைத்துச் செல்வது ஏன்? என தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ. விஜயமுருகன்  கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வேளாண் அதிகாரி, அனைவரையும் பட்டறிவு பயணத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது ஆன் லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட பிறகே அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இத னால் ஏற்கனவே, சென்றவர்கள் மீண்டும் செல்வது தடுக்கப்படும். மேலும், அனைத்து கிராமங்களிலும் உழவன்-உற்பத்தியாளர் குழு அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரி வித்தார்.  மம்சாபுரம், வத்திராயிருப்பு ஆகிய பகுதி களில் உரித்த முழுத் தேங்காயை கொள்முதல் செய்திட கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். தனியார் வியாபாரிகள் 15 லாபக்காய் வாங்குகிறார்கள். இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இராஜபாளையத்தில் உள்ள கொள்முதல் நிலையங்களுக்கு விவ சாயிகள் தேங்காய்களை விற்க கொண்டு சென்றால் வண்டி வாடகை அதிகமாக  செலவா கிறது. மேலும், விவசாயிகள் தேங்காய்களை கொண்டு செல்லும் போது, அதிகாரிகள் வண்டி யை நிறுத்தி செஸ் வரி என அதிகமாக வசூ லிக்கின்றனர் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் விஜயமுருகன் தெரிவித்தார். இதையடுத்து பேசிய வேளாண் அதிகாரி, இருக்கும் பொருளின் மதிப்புக்கு ஏற்ப 1 சதவீத வரி மட்டுமே வசூலிக்க வேண்டும். கூடுதலாக வசூ லிக்க கூடாது எனவும் அலுவலர்களை எச்ச ரித்தார். இதைத்தொடர்ந்து பேசிய ராமச்சந்திரராஜா, வயல்களில் இருந்து நெல்களையும், தோப்பில் இருந்து தேங்காய்களையும் வண்டியில் கொண்டு செல்லும் போது, அதை நிறுத்தி அராஜ கமான முறையில் வரி வசூலில் ஈடுபடுகின்றனர். நாங்கள் விவசாயி என எப்படி நிரூபிப்பது என கேள்வி எழுப்பினார். மேலும், சர்க்கரை ஆலை நிர்வாகம், விவ சாயிகளிடம் கரும்புகளை கொள்முதல் செய்த 15 நாட்களில் பணத்தை வழங்க வேண்டுமென எப்.ஆர்.பி. யில் உள்ளது. ஆனால், தற்போது நீதிமன்ற வழக்கு முடிந்தவுடன்  பணத்தை பெற லாம் என்றால் இது என்ன நியாயம்?  எனவே, மாதம் ஒருமுறை வேளாண் அமைச்சர், அதி காரிகள், கரும்பு விவசாயிகள் பங்கேற்கும் மாநில அளவிலான கூட்டத்தை நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும், இராஜபாளையத்தில் மா விவசாயி களுக்கு ஏலம் மார்க்கெட் ஏற்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்றார்.  அதற்கு பதிலளித்த வேளாண் இணை இயக்குனர், உறுதியாக நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.  

கால்வாய் திட்டத்திற்கு  கூடுதல் நிதி தேவை 

நிலையூர் கம்பிக்குடி கால்வாய் திட்டத்திற் காக அப்பகுதி விவசாயிகள் 40 வருடங்களாக போராடி வருகின்றனர். தற்போது பணிகள் நடை பெற்று வருகின்றன. ஆனால்,  முழுமையாக   அல்லாளப்பேரி கிராமம் வரை பணிகளை முடிக்க  கூடுதல் நிதி தேவைப்படும். எனவே, ஆட்சியர் அப்பகுதியை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றார். அதற்கு பதிலளித்த ஆட்சியர், உடனடியாக ஆய்வு செய்து கூடுதல் நிதி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். இவ்வாறாக விவாதம் நடைபெற்றது.